Skip to main content

فَإِذَا جَآءَتْهُمُ
அவர்களுக்குவந்தால்
ٱلْحَسَنَةُ
இன்பம்
قَالُوا۟
கூறுவார்கள்
لَنَا
எங்களுக்கு
هَٰذِهِۦۖ
இது
وَإِن تُصِبْهُمْ
அவர்களை அடைந்தால்
سَيِّئَةٌ
ஒரு துன்பம்
يَطَّيَّرُوا۟
துர்ச்சகுணமாக எண்ணுவார்கள்
بِمُوسَىٰ
மூஸாவையும்
وَمَن
இன்னும் எவர்கள்
مَّعَهُۥٓۗ
அவருடன்
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّمَا
எல்லாம்
طَٰٓئِرُهُمْ
துர்ச்சகுணம்/அவர்களுடைய
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்தான்
وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ
எனினும்/அவர்களில் அதிகமானவர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Fa izaa jaaa'at humul hasanatu qaaloo lanaa haazihee wa in tusibhum saiyi'atuny yattaiyaroo bi Moosaa wa mam ma'ah; alaaa innamaa taaa'iruhum 'indal laahi wa laakinna aksarahum laa ya'lamoon

எனினும் அவர்களோ, அவர்களுக்கு (யாதொரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது) தான் வந்தது என்றும், யாதொரு தீங்கேற்படும் சமயத்தில் "(இது எங்களுக்கு வர வேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது" என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
مَهْمَا
எவ்வளவோ
تَأْتِنَا
எங்களிடம் வந்தாலும்
بِهِۦ
அதைக் கொண்டு
مِنْ ءَايَةٍ
அத்தாட்சியை
لِّتَسْحَرَنَا
நீர் எங்களை ஏமாற்றுவதற்காக, திசை திருப்புவதற்காக
بِهَا
அதன் மூலம்
فَمَا نَحْنُ
நாங்கள் இல்லை
لَكَ
உம்மை
بِمُؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களாக

Wa qaaloo mahmaa taatinaa bihee min Aayatil litasharanaa bihaa famaa nahnu laka bimu'mineen

அன்றி, அவர்கள் (மூஸாவை நோக்கி) "நீங்கள் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை நீங்கள் எங்கள் முன் செய்தபோதிலும் நாங்கள் உங்களை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறிவிட்டார்கள்.

Tafseer

فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம்
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلطُّوفَانَ
புயல் காற்றை
وَٱلْجَرَادَ
இன்னும் வெட்டுக்கிளிகளை
وَٱلْقُمَّلَ
இன்னும் பேன்களை
وَٱلضَّفَادِعَ
இன்னும் தவளைகளை
وَٱلدَّمَ
இன்னும் இரத்தத்தை
ءَايَٰتٍ
அத்தாட்சிகளாக
مُّفَصَّلَٰتٍ
தெளிவானவை
فَٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமையடித்தனர்
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
قَوْمًا
மக்களாக
مُّجْرِمِينَ
குற்றம் புரிகின்றவர்கள்

Fa arsalnaa 'alaihimut toofaana waljaraada walqum mala waddafaadi'a waddama Aayaatim mufassalaatin fastakbaroo wa kaanoo qawmam mujrimeen

ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பி வைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள்.

Tafseer

وَلَمَّا
போது
وَقَعَ
நிகழ்ந்தது
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلرِّجْزُ
வேதனை
قَالُوا۟
கூறினர்
يَٰمُوسَى
மூஸாவே!
ٱدْعُ
பிரார்த்திப்பீராக
لَنَا
எங்களுக்காக
رَبَّكَ
உம் இறைவனிடம்
بِمَا عَهِدَ
அவன் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டு
عِندَكَۖ
உம்மிடம்
لَئِن كَشَفْتَ
நீர் நீக்கினால்
عَنَّا
எங்களை விட்டு
ٱلرِّجْزَ
வேதனையை
لَنُؤْمِنَنَّ
நிச்சயமாக நம்பிக்கைகொள்வோம்
لَكَ
உம்மை
وَلَنُرْسِلَنَّ
நிச்சயமாக அனுப்புவோம்
مَعَكَ
உம்முடன்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை

Wa lammaa waqa'a 'alaihimur rijzu qaaloo ya Moosad-u lanaa rabbaka bimaa 'ahida 'indaka la'in kashafta 'annar rijza lanu 'minanna laka wa lanursilanna ma'aka Banee Israaa'eel

அவர்கள் மீது (இவைகளில் யாதொரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! உங்களுடைய இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இக்கஷ்டத்தை நீக்கும்படி) நமக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய இக்கஷ்டத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உங்களை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உங்களுடன் அனுப்பி விடுகின்றோம்" என்று கூறுவார்கள்.

Tafseer

فَلَمَّا
போது
كَشَفْنَا
நீக்கினோம்
عَنْهُمُ
அவர்களை விட்டு
ٱلرِّجْزَ
வேதனையை
إِلَىٰٓ
வரை
أَجَلٍ
ஒரு தவணை
هُم
அவர்கள்
بَٰلِغُوهُ
அடைபவர்கள்/அதை
إِذَا
அப்போது
هُمْ
அவர்கள்
يَنكُثُونَ
முறித்து விடுகின்றனர்

Falammaa kashafnaa 'anhumur rijza ilaaa ajalin hum baalighoohu izaa hum yankusoon

நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறு செய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும் வரையில் (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்.

Tafseer

فَٱنتَقَمْنَا
ஆகவே பழி தீர்த்தோம்
مِنْهُمْ
அவர்களிடம்
فَأَغْرَقْنَٰهُمْ
ஆகவே மூழ்கடித்தோம்/அவர்களை
فِى ٱلْيَمِّ
கடலில்
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَا
நம் அத்தாட்சிகளை
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
عَنْهَا
அவற்றை விட்டு
غَٰفِلِينَ
கவனமற்றவர்களாக

Fantaqamnaa minhum fa aghraqnaahum kazzaboo bi Aayaatinaa wa kaanoo 'anhaa ghaafileen

ஆகவே, அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவைகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்.

Tafseer

وَأَوْرَثْنَا
வாரிசாக்கினோம்
ٱلْقَوْمَ
சமுதாயத்தை
ٱلَّذِينَ
எவர்கள்
كَانُوا۟
இருந்தனா்
يُسْتَضْعَفُونَ
பலவீனமாகக் கருதப்படுவர்
مَشَٰرِقَ
கிழக்குப்பகுதிகளுக்கு
ٱلْأَرْضِ
பூமியின்
وَمَغَٰرِبَهَا
இன்னும் மேற்குப் பகுதிகளுக்கு
ٱلَّتِى بَٰرَكْنَا
எது/அருள் வளம் புரிந்தோம்
فِيهَاۖ
அதில்
وَتَمَّتْ
இன்னும் முழுமையடைந்தது
كَلِمَتُ
வாக்கு
رَبِّكَ
உம் இறைவனின்
ٱلْحُسْنَىٰ
மிக அழகியது
عَلَىٰ
மீது
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்கள்
بِمَا صَبَرُوا۟ۖ
அவர்கள் பொறுத்ததால்
وَدَمَّرْنَا
இன்னும் நாசப்படுத்தினோம்
مَا
எவற்றை
كَانَ
இருந்தான்
يَصْنَعُ
செய்வான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்னும்
وَقَوْمُهُۥ
இன்னும் அவனுடைய சமுதாயமும்
وَمَا كَانُوا۟
இன்னும் எவற்றை/இருந்தனர்
يَعْرِشُونَ
உயர்த்திக் கட்டுவார்கள்

Wa awrasnal qawmal lazeena kaanoo yustad'afoona mashaariqal ardi wa maghaari bahal latee baaraknaa feehaa wa tammat kalimatu Rabbikal husnaa 'alaa Baneee Israaa'eela bimaa sabaroo wa dammarnaa maa kaana yasna'u Fir'awnu wa qawmuhoo wa maa kaanoo ya'rishoon

ஆகவே, எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகம், மேற்குப் பாகம் ஆகிய அனைத்தையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்லவிதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.

Tafseer

وَجَٰوَزْنَا
கடக்க வைத்தோம்
بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
ٱلْبَحْرَ
கடலை
فَأَتَوْا۟
வந்தனர்
عَلَىٰ
அருகில்
قَوْمٍ
ஒரு சமுதாயத்தின்
يَعْكُفُونَ
வழிபாட்டுக்காக தங்கியிருக்கின்றனர்
عَلَىٰٓ أَصْنَامٍ
சிலைகளுக்கருகில்
لَّهُمْۚ
தங்கள்
قَالُوا۟
கூறினர்
يَٰمُوسَى
மூஸாவே!
ٱجْعَل
ஏற்படுத்து
لَّنَآ
எங்களுக்கு
إِلَٰهًا
வணங்கப்படும் ஒரு கடவுளை
كَمَا
போல்
لَهُمْ
அவர்களுக்கு
ءَالِهَةٌۚ
வணங்கப்படும் கடவுள்கள்
قَالَ
கூறினார்
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
قَوْمٌ
சமுதாயம்
تَجْهَلُونَ
அறியமாட்டீர்கள்

Wa jaawaznaa bi Banneee Israaa'eelal bahra fa ataw 'alaa qawminy ya'kufoona 'alaaa asnaamil lahum; qaaloo yaa Moosaj'al lanaa ilaahan kamaa lahum aalihah; qaala innakum qawmun tajhaloon

நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதனைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வையுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்" என்று கூறினார்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
مُتَبَّرٌ
அழிக்கப்படக் கூடியது
مَّا
எது
هُمْ
அவர்கள்
فِيهِ
அதில்
وَبَٰطِلٌ
இன்னும் பொய்
مَّا
எவை
كَانُوا۟
இருக்கின்றனர்
يَعْمَلُونَ
செய்கிறார்கள்

Innaa haaa'ulaaa'i mutabbarum maa hum feehi wa baatilum maa kaanoo ya'maloon

(அன்றி, சிலையை வணங்கும் மக்களைச் சுட்டிக் காண்பித்து) "நிச்சயமாக இந்த மக்களிருக்கும் மார்க்கம் அழிந்துவிடக் கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது" என்றும் கூறினார்.)

Tafseer

قَالَ
கூறினார்
أَغَيْرَ
அல்லாததையா?
ٱللَّهِ
அல்லாஹ்
أَبْغِيكُمْ
தேடுவேன்/ உங்களுக்கு
إِلَٰهًا
வணங்கப்படும் ஒரு கடவுளாக
وَهُوَ
அவனோ
فَضَّلَكُمْ
மேன்மைப்படுத்தினான்/உங்களை
عَلَى ٱلْعَٰلَمِينَ
உலகத்தார்களைப் பார்க்கிலும்

Qaala a-ghairal laahi abgheekum ilaahanw wa Huwa faddalakum 'alal 'aalameen

(தவிர) "அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கி வைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்" என்றும் அவர் கூறினார்.

Tafseer