Skip to main content

قَالُوٓا۟
கூறினார்கள்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِرَبِّ
இறைவனை
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்

Qaaloo aamannaa bi Rabbil 'aalameen

"அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்" என்று கூறினார்கள்.

Tafseer

رَبِّ
இறைவனான
مُوسَىٰ
மூஸா
وَهَٰرُونَ
இன்னும் ஹாரூனுடைய

Rabbi Moosaa wa Haaroon

மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினான்.
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டீர்கள்
بِهِۦ
அவரை
قَبْلَ
முன்னர்
أَنْ ءَاذَنَ
நான் அனுமதியளிப்பதற்கு
لَكُمْۖ
உங்களுக்கு
إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இது
لَمَكْرٌ
சூழ்ச்சிதான்
مَّكَرْتُمُوهُ
சூழ்ச்சிசெய்தீர்கள்/அதை
فِى ٱلْمَدِينَةِ
நகரத்தில்
لِتُخْرِجُوا۟
நீங்கள் வெளியேற்றுவதற்காக
مِنْهَآ
அதிலிருந்து
أَهْلَهَاۖ
அதில் வசிப்போரை
فَسَوْفَ تَعْلَمُونَ
அறிவீர்கள்

Qaala Fir'awnu aamantum bihee qabla an aazana lakum; inna haaza lamakrum makartumoohu filmadeenati litukhrijoo minhaaa ahlahaa fasawfa ta'almoon

அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

Tafseer

لَأُقَطِّعَنَّ
நிச்சயமாக வெட்டுவேன்
أَيْدِيَكُمْ
உங்கள் கைகளை
وَأَرْجُلَكُم
இன்னும் உங்கள் கால்களை
مِّنْ خِلَٰفٍ
மாறாக
ثُمَّ
பிறகு
لَأُصَلِّبَنَّكُمْ
நிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்/உங்களை
أَجْمَعِينَ
அனைவரையும்

La uqatti'anna aidiyakum wa arjulakum min khilaafin summa la usallibannakum ajma'een

நிச்சயமாக நான் உங்களுடைய மாறு கை, மாறு கால்களை வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்" என்று கூறினான்.

Tafseer

قَالُوٓا۟ إِنَّآ
கூறினர்/நிச்சயமாக நாங்கள்
إِلَىٰ رَبِّنَا
எங்கள் இறைவனிடம்
مُنقَلِبُونَ
திரும்பக்கூடியவர்கள்

Qaaloo innaaa ilaa Rabbinaa munqaliboon

அதற்கவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)" என்று கூறினார்கள்.

Tafseer

وَمَا تَنقِمُ
நீ பழிக்கவில்லை
مِنَّآ
எங்களை
إِلَّآ
தவிர
أَنْ ءَامَنَّا
என்பதற்காக/நம்பிக்கை கொண்டோம்
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
رَبِّنَا
எங்கள் இறைவனின்
لَمَّا
போது
جَآءَتْنَاۚ
வந்தன/எங்களிடம்
رَبَّنَآ
எங்கள் இறைவா
أَفْرِغْ
இறக்கு
عَلَيْنَا
எங்கள் மீது
صَبْرًا
பொறுமையை
وَتَوَفَّنَا
கைப்பற்று/எங்களை
مُسْلِمِينَ
முஸ்லிம்களாக

Wa maa tanqimu minnaaa illaaa an aamannaa bi Aayaati Rabbinaa lammaa jaaa'atnaa; Rabbanaaa afrigh 'alainaa sabranw wa tawaffanaa muslimeen

(அன்றி) "எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை" (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!" (என்று பிரார்த்தித்தார்கள்.)

Tafseer

وَقَالَ
கூறினார்(கள்)
ٱلْمَلَأُ
தலைவர்கள்
مِن قَوْمِ
சமுதாயத்திலிருந்து
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
أَتَذَرُ مُوسَىٰ
நீ விட்டுவிடப்போகிறாயா? / மூஸாவை
وَقَوْمَهُۥ
இன்னும் அவருடைய சமுதாயத்தை
لِيُفْسِدُوا۟
அவர்கள் விஷமம் செய்வதற்கு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَيَذَرَكَ
இன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னை
وَءَالِهَتَكَۚ
இன்னும் உன் தெய்வங்களை
قَالَ
கூறினான்
سَنُقَتِّلُ
கொன்று குவிப்போம்
أَبْنَآءَهُمْ
ஆண் பிள்ளைகளை அவர்களுடைய
وَنَسْتَحْىِۦ
இன்னும் வாழவிடுவோம்
نِسَآءَهُمْ
அவர்களுடைய பெண் (பிள்ளை)களை
وَإِنَّا
நிச்சயமாக நாம்
فَوْقَهُمْ
அவர்களுக்கு மேல்
قَٰهِرُونَ
ஆதிக்கம் வகிப்பவர்கள்

Wa qaalal mala-u min qawmi Fir'awna atazaru Moosaa wa qawmahoo liyufsidoo fil ardi wa yazaraka wa aalihatak; qaala sanuqattilu abnaaa 'ahum wa nastahyee nisaaa'ahum wa innaa fawqahum qaahiroon

அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?" என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கின்றோம். (ஆகவே நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)" என்று கூறினான்.

Tafseer

قَالَ
கூறினார்
مُوسَىٰ
மூஸா
لِقَوْمِهِ
தன் சமுதாயத்திற்கு
ٱسْتَعِينُوا۟
உதவி தேடுங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَٱصْبِرُوٓا۟ۖ
இன்னும் பொறுத்திருங்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱلْأَرْضَ
பூமி
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
يُورِثُهَا
வாரிசாக்குவான்/அதற்கு
مَن يَشَآءُ
எவரை/நாடுகிறான்
مِنْ عِبَادِهِۦۖ
தன் அடியார்களில்
وَٱلْعَٰقِبَةُ
முடிவு
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே

Qaala Moosaa liqawmihis ta'eenoo billaahi wasbiroo innal arda lillaahi yoorisuhaa mai yashaaa'u min 'ibaadihee wal 'aaqibatu lilmuttaqeen

(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி "நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்" என்று கூறினார்.

Tafseer

قَالُوٓا۟
கூறினர்
أُوذِينَا
துன்புறுத்தப்பட்டோம்
مِن قَبْلِ
முன்னர்
أَن تَأْتِيَنَا
நீர் வருவதற்கு/எங்களிடம்
وَمِنۢ بَعْدِ
இன்னும் பின்னர்
مَا جِئْتَنَاۚ
நீர்வந்தது/எங்களிடம்
قَالَ
கூறினார்
عَسَىٰ رَبُّكُمْ
கூடும்/உங்கள் இறைவன்
أَن يُهْلِكَ
அவன் அழித்து
عَدُوَّكُمْ
எதிரிகளை/உங்கள்
وَيَسْتَخْلِفَكُمْ
இன்னும் அதிபதிகளாக்க/உங்களை
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَيَنظُرَ
கவனிப்பான்
كَيْفَ
எவ்வாறு
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்

Qaaloo oozeenaa min qabli an taatiyanaa wa mim ba'di maa ji'tanaa; qaala 'asaa Rabbukum ai yuhlika 'aduwwakum wa yastakhli fakum fil ardi fayanzura kaifa ta'maloon

(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகின்றோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) "உங்களுடைய இறைவன் உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்" என்று கூறினார்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَخَذْنَآ
பிடித்தோம், சோதித்தோம், தண்டித்தோம்,
ءَالَ
குடும்பத்தாரை
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
بِٱلسِّنِينَ
பஞ்சங்களாலும்
وَنَقْصٍ
இன்னும் குறைத்து
مِّنَ ٱلثَّمَرَٰتِ
கனிகளை
لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக

Wa laqad akhaznaaa Aala Fir'awna bis sineena wa naqsim minas samaraati la'allahum yazzakkaroon

பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சம் பீடிக்கச் செய்து (அவர்களுடைய விவசாய) பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம்.

Tafseer