Skip to main content

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
مَأْوَىٰهُمْ
அவர்களுடைய ஒதுங்குமிடம்
جَهَنَّمُ
நரகம்
وَلَا يَجِدُونَ
பெறமாட்டார்கள்
عَنْهَا
அதை விட்டு
مَحِيصًا
ஒரு மீளுமிடத்தை

Ulaaa'ika maawaahum Jahannamu wa laa yajidoona 'anhaa maheesaa

இத்தகையவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து தப்ப யாதொரு வழியையும் காணமாட்டார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
سَنُدْخِلُهُمْ
அவர்களை நுழைப்போம்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَآ
அவற்றில்
أَبَدًاۖ
என்றென்றும்
وَعْدَ
வாக்குறுதி
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
حَقًّاۚ
உண்மையான
وَمَنْ
யார்
أَصْدَقُ
மிக உண்மையானவன்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வை விட
قِيلًا
சொல்லில்

Wallazeena aamanoo wa 'amilus saalihaati sanud khiluhum Jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaaa abadaa; wa'dal laahi haqqaa; wa man asdaqu minal laahi qeelaa

எவர்கள் (இத்தகைய ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின் றார்களோ அவர்களை (மறுமையில்) நாம் சுவனபதிகளில் புகுத்து வோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். அல்லாஹ் வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! அல்லாஹ்வை விட உண்மை சொல்பவர் யார்?

Tafseer

لَّيْسَ بِأَمَانِيِّكُمْ
இல்லை/உங்கள் விருப்பங்களைக் கொண்டு
وَلَآ
இன்னும் இல்லை
أَمَانِىِّ
விருப்பங்கள்
أَهْلِ ٱلْكِتَٰبِۗ
வேதக்காரர்களின்
مَن
எவன்
يَعْمَلْ
செய்வான்
سُوٓءًا
ஒரு தீமையை
يُجْزَ
கூலி கொடுக்கப்படுவான்
بِهِۦ
அதற்கு
وَلَا يَجِدْ
இன்னும் பெறமாட்டான்
لَهُۥ
தனக்கு
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்
وَلِيًّا
பாதுகாவலரை
وَلَا نَصِيرًا
இன்னும் உதவியாளரை

Laisa bi amaaniyyikum wa laaa amaaniyyi Ahlil Kitaab; mai ya'mal sooo'ai yujza bihee wa laa yajid lahoo min doonil laahi waliyanw wa laa naseeraa

(நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப் படியோ, வேதத்தையுடையோர் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கின்றானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவர்களையோ அல்லது துணை புரிபவர்களையோ (அங்கு) காணமாட்டான்.

Tafseer

وَمَن
இன்னும் எவர்
يَعْمَلْ
செய்வார்
مِنَ
இருந்து
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
مِن
இருந்து
ذَكَرٍ
ஓர் ஆண்
أَوْ
அல்லது
أُنثَىٰ
ஒரு பெண்
وَهُوَ
அவர் இருக்க
مُؤْمِنٌ
நம்பிக்கையாளராக
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
يَدْخُلُونَ
நுழைவார்கள்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
وَلَا يُظْلَمُونَ
இன்னும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்
نَقِيرًا
கீறல் அளவும்

Wa mai ya'mal minas saalihaati min zakarin aw unsaa wa huwa mu'minun fa ulaaa'ika yadkhuloonal Jannata wa laa yuzlamoona naqeeraa

ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

وَمَنْ
யார்
أَحْسَنُ
மிக அழகானவர்
دِينًا
மார்க்கத்தால்
مِّمَّنْ
எவரைவிட
أَسْلَمَ
பணியவைத்தார்
وَجْهَهُۥ
தன் முகத்தை
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
وَهُوَ
அவர் இருக்க
مُحْسِنٌ
நற்குணமுடையவராக
وَٱتَّبَعَ
இன்னும் பின்பற்றினார்
مِلَّةَ
மார்க்கத்தை
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுடைய
حَنِيفًاۗ
உறுதியுடையவராக
وَٱتَّخَذَ
இன்னும் எடுத்துக்கொண்டான்
ٱللَّهُ إِبْرَٰهِيمَ
அல்லாஹ்/இப்ராஹீமை/நண்பராக

Wa man ahsanu deenam mimmman aslama wajhahoo lillaahi wa huwa muhsinunw wattaba'a Millata Ibraaheema haneefaa; wattakhazal laahu Ibraaheema khaleelaa

எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, நன்மையும் செய்து, இப்ராஹீமுடைய நேரான (இம்)மார்க்கத்தையும் பின்பற்று கின்றாரோ அவரை விட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை(த் தன்னுடைய) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கின்றான்.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கு
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَمَا فِى
இன்னும் பூமியிலுள்ளவை
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
مُّحِيطًا
சூழ்ந்தறிபவனாக

Wa lillaahi maa fis samaawaati wa maa fil ard; wa kaanal laahu bikulli shai'im muheetaa

வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்த(றிப)வனாக இருக்கின்றான்.

Tafseer

وَيَسْتَفْتُونَكَ
மார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர்/உம்மிடம்
فِى ٱلنِّسَآءِۖ
பெண்களைப் பற்றி
قُلِ ٱللَّهُ
கூறுவீராக/அல்லாஹ்
يُفْتِيكُمْ
தீர்ப்பளிக்கிறான்
فِيهِنَّ
அவர்களைப் பற்றி
وَمَا يُتْلَىٰ
இன்னும் எது ஓதப்படுகிறதோ
عَلَيْكُمْ
உங்களுக்கு
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
فِى يَتَٰمَى
அனாதைகளில்
ٱلنِّسَآءِ
பெண்கள்
ٱلَّٰتِى
எவர்கள்
لَا تُؤْتُونَهُنَّ
நீங்கள் கொடுப்பதில்லை/அவர்களுக்கு
مَا كُتِبَ
எது/விதிக்கப்பட்டது
لَهُنَّ
அவர்களுக்கு
وَتَرْغَبُونَ
விரும்புகிறீர்கள்
أَن
நீங்கள் மண முடிப்பது
تَنكِحُوهُنَّ
நீங்கள் மண முடிப்பது அவர்களை
وَٱلْمُسْتَضْعَفِينَ
பலவீனர்கள்
مِنَ
இருந்து
ٱلْوِلْدَٰنِ
சிறுவர்கள்
وَأَن تَقُومُوا۟
இன்னும் நீங்கள் நிற்பது
لِلْيَتَٰمَىٰ
அனாதைகளுக்கு
بِٱلْقِسْطِۚ
நீதத்தைக் கொண்டு
وَمَا تَفْعَلُوا۟
எது/செய்வீர்கள்
مِنْ
இருந்து
خَيْرٍ
நன்மை
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
بِهِۦ
அதை
عَلِيمًا
நன்கறிந்தவனாக

Wa yastaftoonaka finnisaaa'i qulil laahu yufteekum feehinna wa maa yutlaa 'alaikum fil Kitaabi fee yataaman nisaaa'il laatee laa tu'toonahunna mmaa kutiba lahunnna wa targhaboona an tankihoohunna wal mustad'a feena minal wildaani wa an taqoomoo lilyataamaa bilqist; wa maa taf'aloo min khairin fa innal laaha kaana bihee 'Aleemaa

(நபியே!) அவர்கள் உங்களிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு (அடுத்த வசனத்திலிருந்து) கட்டளையிடுகின்றான். இதற்கு முன்னர் (பெண்களைப் பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டது அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். அவர்களுக்குக் குறிப்பிட்டுள்ள மஹரை நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதைப் பற்றியும் (அவர்களிலுள்ள) விவரமறியா குழந்தைகளைப் பற்றியும் (அதில் கூறி) "அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, (அவர்களுக்கு) நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்து கொள்வான்.

Tafseer

وَإِنِ ٱمْرَأَةٌ
ஒரு பெண் பயந்தால்
مِنۢ
இருந்து
بَعْلِهَا
தனது கணவன்
نُشُوزًا أَوْ
வெறுப்பை/அல்லது
إِعْرَاضًا
புறக்கணிப்பை
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
عَلَيْهِمَآ
அவ்விருவர் மீது
أَن يُصْلِحَا
அவ்விருவரும் சமாதானம் செய்வது
بَيْنَهُمَا
அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில்
صُلْحًاۚ
ஒரு சமாதான ஒப்பந்தத்தை
وَٱلصُّلْحُ خَيْرٌۗ
சமாதானம்/சிறந்தது
وَأُحْضِرَتِ
அமைக்கப்பட்டுள்ளன
ٱلْأَنفُسُ
ஆன்மாக்கள்
ٱلشُّحَّۚ
கஞ்சத்தனம் மீது
وَإِن تُحْسِنُوا۟
நீங்கள் நன்மைசெய்தால்
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சினால்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
بِمَا
எதை
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக

Wa inimra atun khaafat mim ba'lihaa nushoozan aw i'raadan falaa junaaha 'alaihi maaa ai yuslihaa bainahumaa sulhaa; wassulhu khair; wa uhdiratil anfusush shuhh; wa in tuhsinoo wa tattaqoo fa innal laaha kaana bimaa ta'maloona Khabeeraa

எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் தன்னை (கடுமையாக இடையூறளிப்பான்) என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. (எவ்விதத்திலும் இருவரும் சம்மதித்த) சமாதானமே மிக மேலானது. (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏதும் பொருள் கொடுக்கும்படி நேரிட்டால் பொதுவாக) ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றது. ஆகவே, நீங்கள் (கஞ்சத்தனத்திற்கு உட்படாமல்) ஒவ்வொருவரும் மற்றவருக்கு உபகாரியாயிருந்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிந்து கொள்வான்.

Tafseer

وَلَن تَسْتَطِيعُوٓا۟
அறவே இயலமாட்டீர்கள்
أَن تَعْدِلُوا۟
நீங்கள் நீதமாக நடப்பதற்கு
بَيْنَ
இடையில்
ٱلنِّسَآءِ
பெண்கள்,மனைவிகள்
وَلَوْ حَرَصْتُمْۖ
நீங்கள் ஆசைப்பட்டாலும்
فَلَا تَمِيلُوا۟
ஆகவே சாய்ந்து விடாதீர்கள்
كُلَّ ٱلْمَيْلِ
முற்றிலும் சாய்தல்
فَتَذَرُوهَا
விட்டு விடுவீர்கள் அவளை
كَٱلْمُعَلَّقَةِۚ
தொங்கவிடப்பட்டவளைப் போன்று
وَإِن تُصْلِحُوا۟
நீங்கள் சமாதானம் செய்து கொண்டால்
وَتَتَّقُوا۟
இன்னும் அல்லாஹ்வை அஞ்சினால்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Wa lan tastatee'ooo an ta'diloo bainan nisaaa'i wa law harastum falaa tameeloo kullal maili fatazaroohaa kalmu'al laqah; wa in tuslihoo wa tattaqoo fa innal laaha kaana Ghafoorar Raheema

(நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் (முற்றிலும்) நீதமாக நடக்க வேண்டுமென்று (எவ்வளவு) விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கினவளாக விட்டு விடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்துகொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கிருபை புரிபவனாக இருக்கின்றான்.

Tafseer

وَإِن يَتَفَرَّقَا
அவ்விருவரும் பிரிந்து விட்டால்
يُغْنِ
நிறைவடையச் செய்வான்
ٱللَّهُ
அல்லாஹ்
كُلًّا
ஒவ்வொருவரையும்
مِّن سَعَتِهِۦۚ
தன் கொடையினால்
وَكَانَ
இன்னும் இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَٰسِعًا
விசாலமானவனாக
حَكِيمًا
ஞானவானாக

Wa iny-yatafarraqaa yughnil laahu kullam min sa'atih; wa kaanal laahu Waasi'an Hakeemaa

(சமாதானத்துடன் சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையைக் கொண்டு (ஒருவர் மற்றொருவருக்கு) முற்றிலும் தேவையற்றவராக ஆக்கி விடுவான். (வழங்குவதில்) அல்லாஹ் மிக விசாலமானவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer