Skip to main content

وَإِذَا ضَرَبْتُمْ
நீங்கள் பயணித்தால்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَلَيْسَ
இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
جُنَاحٌ
குற்றம்
أَن تَقْصُرُوا۟
நீங்கள் சுருக்குவது
مِنَ ٱلصَّلَوٰةِ
தொழுகையை
إِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
أَن يَفْتِنَكُمُ
துன்புறுத்துவதை/உங்களை
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوٓا۟ۚ
நிராகரித்தார்கள்
إِنَّ ٱلْكَٰفِرِينَ
நிச்சயமாக நிராகரிப்பாளர்கள்
كَانُوا۟
இருக்கின்றனர்
لَكُمْ
உங்களுக்கு
عَدُوًّا مُّبِينًا
எதிரிகளாக /பகிரங்கமான

Wa izaa darabtum fil ardi falaisa 'alaikum junaahun an taqsuroo minas Salaati in khiftum ai yaftinakumul lazeena kafarooo; innal kaafireena kaanoo lakum aduwwam mubeenaa

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணம் செய்யும் காலத்தில் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் நீங்கள் ("கஸர்" தொழுவது அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. ஏனென்றால், நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.

Tafseer

وَإِذَا كُنتَ
நீர் இருந்தால்
فِيهِمْ
அவர்களில்
فَأَقَمْتَ
இன்னும் நிலைநிறுத்தினால்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
فَلْتَقُمْ
நிற்கவும்
طَآئِفَةٌ
ஒரு பிரிவு
مِّنْهُم
அவர்களில்
مَّعَكَ
உம்முடன்
وَلْيَأْخُذُوٓا۟
அவர்கள் எடுக்கவும்
أَسْلِحَتَهُمْ
ஆயுதங்களை/தங்கள்
فَإِذَا سَجَدُوا۟
அவர்கள் சஜ்தா செய்து விட்டால்
فَلْيَكُونُوا۟
அவர்கள் இருக்கவும்
مِن وَرَآئِكُمْ
உங்களுக்குப் பின்னர்
وَلْتَأْتِ
இன்னும் வரவும்
طَآئِفَةٌ أُخْرَىٰ
ஒரு பிரிவு/மற்ற
لَمْ يُصَلُّوا۟
அவர்கள் தொழவில்லை
فَلْيُصَلُّوا۟
அவர்கள் தொழவும்
مَعَكَ
உம்முடன்
وَلْيَأْخُذُوا۟
அவர்கள் எடுக்கவும்
حِذْرَهُمْ
தங்கள் தற்காப்பை
وَأَسْلِحَتَهُمْۗ
இன்னும் தங்கள் ஆயுதங்களை
وَدَّ ٱلَّذِينَ
விரும்பினார்(கள்)/ எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
لَوْ تَغْفُلُونَ
நீங்கள் கவனமற்று விடுவதை
عَنْ
இருந்து
أَسْلِحَتِكُمْ
உங்கள் ஆயுதங்கள்
وَأَمْتِعَتِكُمْ
இன்னும் உங்கள் பொருள்கள்
فَيَمِيلُونَ
அவர்கள் பாய்ந்து விடுவார்கள்
عَلَيْكُم
உங்கள் மீது
مَّيْلَةً
பாய்ச்சல்
وَٰحِدَةًۚ
ஒரே பாய்ச்சல்
وَلَا جُنَاحَ
குற்றமில்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
إِن كَانَ
இருந்தால்
بِكُمْ
உங்களுக்கு
أَذًى
சிரமம்
مِّن
காரணமாக
مَّطَرٍ
மழை
أَوْ
அல்லது
كُنتُم
இருந்தீர்கள்
مَّرْضَىٰٓ
நோயாளிகளாக
أَن تَضَعُوٓا۟
நீங்கள் வைப்பது
أَسْلِحَتَكُمْۖ
உங்கள் ஆயுதங்களை
وَخُذُوا۟
இன்னும் எடுங்கள்
حِذْرَكُمْۗ
உங்கள் தற்காப்பை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
أَعَدَّ
ஏற்படுத்தினான்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
عَذَابًا
வேதனையை
مُّهِينًا
இழிவான

Wa izaa kunta feehim fa aqamta lahumus Salaata faltaqum taaa'ifatum minhum ma'aka walyaakhuzooo aslihatahum fa izaa sajadoo fal yakoonoo minw waraaa'ikum waltaati taaa'ifatun ukhraa lam yusalloo falyusallo ma'aka walyaakhuzoo hizrahum wa aslihatahum; waddal lazeena kafaroo law taghfuloona 'anaslihatikum wa amti'atikum fa yameeloona 'alaikum mailatanw waahidah; wa laa junaaha 'alaikum in kaana bikum azam mimmatarin aw kuntum mmardaaa an tada'ooo aslihatakum wa khuzoo hizrakum; innal laaha a'adda lilkaafireena 'azaabam muheenaa

(நபியே! போர் முனையில்) நீங்களும் அவர்களுடன் இருந்து அவர்களைத் தொழவைக்க நீங்கள் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கையில்) தங்களுடைய ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) "ஸஜ்தா" செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கையில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள் களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டு மென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினாலோ அல்லது நீங்கள் நோயாளியாக இருந்தோ உங்கள் ஆயுதங்களைக் (கையில் பிடிக்க முடியா விட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.

Tafseer

فَإِذَا قَضَيْتُمُ
நீங்கள் முடித்தால்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
فَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
قِيَٰمًا
நின்றவர்களாக
وَقُعُودًا
இன்னும் உட்கார்ந்தவர்களாக
وَعَلَىٰ
இன்னும் மீது
جُنُوبِكُمْۚ
உங்கள் விலாக்கள்
فَإِذَا ٱطْمَأْنَنتُمْ
நீங்கள் நிம்மதியடைந்தால்
فَأَقِيمُوا۟
நிலை நிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَۚ
தொழுகையை
إِنَّ ٱلصَّلَوٰةَ
நிச்சயமாக தொழுகை
كَانَتْ عَلَى
இருக்கிறது/மீது
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
كِتَٰبًا
கடமையாக
مَّوْقُوتًا
நேரம் குறிக்கப்பட்டது

Fa izaa qadaitumus Salaata fazkurul laaha qiyaamanw wa qu'oodanw wa 'alaa junoobikum; fa izat maanantum fa aqeemus Salaah; innas Salaata kaanat 'alal mu'mineena kitaabam mawqootaa

(நம்பிக்கையாளர்களே! இவ்வாறு) நீங்கள் (தொழுது) தொழுகையை முடித்துக் கொண்டால் உங்கள் நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறி "திக்ரு" செய்துகொண்டே இருங்கள். (எதிரியின் தாக்குதலிளிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால் (முறைப்படி) தொழுங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கின்றது.

Tafseer

وَلَا تَهِنُوا۟
சோர்வடையாதீர்கள்
فِى ٱبْتِغَآءِ
தேடுவதில்
ٱلْقَوْمِۖ
கூட்டத்தை
إِن تَكُونُوا۟
நீங்கள் இருந்தால்
تَأْلَمُونَ
வேதனைப் படுபவர்களாக
فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
يَأْلَمُونَ كَمَا
வேதனைப்படுகிறார்கள்/போன்று
تَأْلَمُونَۖ
வேதனைப் படுபவர்களாக
وَتَرْجُونَ
இன்னும் ஆதரவு வைக்கிறீர்கள்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்/எது
لَا يَرْجُونَۗ
அவர்கள் ஆதரவு வைக்க மாட்டார்கள்
وَكَانَ ٱللَّهُ
இருக்கிறான்/அல்லாஹ்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَكِيمًا
ஞானவானாக

Wa laa tahinoo fibtighaaa'il qawmi in takoonoo taalamoona fa innahum yaalamoona kamaa taalamoona wa tarjoona minal laahi maa laa yarjoon; wa kaanal laahu 'Aleeman Hakeemaa

எதிரிகளைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள். (அதனால்) உங்களுக்குக் கஷ்டம் நேருவதாயினும் (பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால்) நீங்கள் கஷ்டத்தை அனுபவிப்பதைப் போலவே அவர்களும் கஷ்டத்தை அனுபவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்க்க முடியாத (வெற்றி, நற்கூலி அனைத்)தையும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்கின் றீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாமே
أَنزَلْنَآ
இறக்கினோம்
إِلَيْكَ
உம்மீது
ٱلْكِتَٰبَ
இவ்வேதத்தை
بِٱلْحَقِّ
உண்மையுடன்
لِتَحْكُمَ
நீர் தீர்ப்பளிப்பதற்காக
بَيْنَ
மத்தியில்
ٱلنَّاسِ
மக்கள்
بِمَآ
எதைக்கொண்டு
أَرَىٰكَ
உமக்கு அறிவித்தான்
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَلَا تَكُن
ஆகிவிடாதீர்
لِّلْخَآئِنِينَ
மோசடிக்காரர்களுக்கு
خَصِيمًا
தர்க்கிப்பவராக

Innaaa anzalnaaa ilaikal Kitaaba bilhaqqi litahkuma bainan naasi bimaaa araakal laah; wa laa takul lilkhaaa'ineena khaseemaa

(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவைகளைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உங்கள் மீது இறக்கியிருக்கின்றோம். ஆகவே, நீங்கள் மோசடிக்காரர்களுக்குச் (சார்பாக) தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம்.

Tafseer

وَٱسْتَغْفِرِ
இன்னும் மன்னிப்புக் கோருவீராக
ٱللَّهَۖ
அல்லாஹ்விடம்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Wastaghfiril laaha innal laaha kaana Ghafoorar Raheema

(இதில் ஏதும் தவறேற்பட்டுவிட்டால் அதற்காக) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும் அன்புடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَلَا تُجَٰدِلْ
இன்னும் வாதிடாதீர்
عَنِ
சார்பாக
ٱلَّذِينَ
எவர்கள்
يَخْتَانُونَ
மோசடி செய்கிறார்கள்
أَنفُسَهُمْۚ
தங்களுக்கே
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
مَن
எவன்
كَانَ
இருக்கிறான்
خَوَّانًا
சதிகாரனாக
أَثِيمًا
பாவியாக

Wa laa tujaadil 'anil lazeena yakhtaanoona anfusahum; innal laaha laa yuhibbuman kaana khawwaanan aseemaa

(நபியே!) எவர்கள் (மனிதர்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே சதி செய்து கொண்டார்களோ அவர்களுக்காக (என்னிடம் மன்னிப்பைக் கோரி) நீங்கள் தர்க்கிக்க வேண்டாம். ஏனென்றால், எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

Tafseer

يَسْتَخْفُونَ مِنَ
மறைக்கத் தேடுகிறார்கள்/மக்களிடம்
وَلَا يَسْتَخْفُونَ
அவர்கள் மறைக்கத் தேடுவதில்லை
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَهُوَ
அவன்
مَعَهُمْ
அவர்களுடன்
إِذْ
போது
يُبَيِّتُونَ مَا
சதித்திட்டம் செய்கின்றனர்/எதை
لَا يَرْضَىٰ
விரும்பமாட்டான்
مِنَ ٱلْقَوْلِۚ
பேச்சில்
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ بِمَا
அல்லாஹ்/எதை
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
مُحِيطًا
சூழ்ந்தவனாக

Yastakhfoona minannaasi wa laa yastakh foona minal laahi wa huwa ma'ahum iz yubaiyitoona maa laa yardaa minal qawl; wa kaanal laahu bimaa ya'maloona muheetaa

இவர்கள் (சதி செய்யும் தங்கள் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கின்றார்கள். எனினும், (அதனை) அல்லாஹ்வுக்கு மறைத்து விட முடியாது. (அல்லாஹ்) விரும்பாத விஷயங்களைக் கொண்டு இவர்கள் இரவெல்லாம் பேசி சதி ஆலோசனை செய்யும்போது அவன் அவர்களுடன்தான் இருக்கின்றான். அல்லாஹ் அவர்களுடைய(சதிச்) செயலை(த் தன் ஞானத்தால்) சூழ்ந்து கொண்டும் இருக்கின்றான்.

Tafseer

هَٰٓأَنتُمْ
நீங்கள்
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
جَٰدَلْتُمْ
வாதிடுகிறீர்களா?
عَنْهُمْ
இவர்கள் சார்பாக
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
فَمَن
யார்
يُجَٰدِلُ
வாதிடுவார்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
عَنْهُمْ
இவர்கள் சார்பாக
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
أَم
அல்லது
مَّن
யார்
يَكُونُ
இருப்பார்
عَلَيْهِمْ
இவர்கள் மீது
وَكِيلًا
பொறுப்பாளராக

haaa antum haaa'ulaaa'i jaadaltum 'anhum fil hayaatid dunyaa famai yujaadilul laaha 'anhum Yawmal Qiyaamati am mai yakoonu 'alaihim wakeelaa

நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கின்றீர்கள்? மறுமைநாளில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவன் யார்? அன்றி (அந்நாளில்) இவர்களுக்குப் பரிந்து பேசுபவன் யார்?

Tafseer

وَمَن يَعْمَلْ
எவர்/செய்வார்
سُوٓءًا
ஒரு தீமையை
أَوْ
அல்லது
يَظْلِمْ
அநீதியிழைப்பார்
نَفْسَهُۥ
தனக்கு
ثُمَّ
பிறகு
يَسْتَغْفِرِ
மன்னிப்புக் கேட்பார்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
يَجِدِ
காண்பார்
ٱللَّهَ
அல்லாஹ்வை
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Wa mai ya'mal sooo'an aw yazlim nafsahoo summa yastaghfiril laaha yajidil laaha Ghafoorar Raheemaa

எவரேனும், யாதொரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும் (அவன் மீது) நிகரற்ற அன்புடையவனாகவும் காண்பான்.

Tafseer