Skip to main content

وَإِذْ غَدَوْتَ
நீர் காலையில் புறப்பட்ட சமயத்தை
مِنْ
இருந்து
أَهْلِكَ
உம் குடும்பம்
تُبَوِّئُ
தங்கவைக்கிறீர்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
مَقَٰعِدَ
இடங்களில்
لِلْقِتَالِۗ
போருக்காக
وَٱللَّهُ
அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa iz ghadawta min ahlika tubawwi'ul mu'mineena maqaa'ida lilqitaal; wallaahu samee'un 'aleem

(நபியே!) நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு(ச் சென்று) நம்பிக்கை கொண்டவர்களை போர்க்களத்தில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள். (அனைத்தையும்) அல்லாஹ் செவியுறுபவனாகவும், நன்கறிந்த வனாகவும் இருக்கிறான்.

Tafseer

إِذْ هَمَّت
நாடிய சமயம்
طَّآئِفَتَانِ
இரு பிரிவினர்
مِنكُمْ
உங்களில்
أَن تَفْشَلَا
அவர்கள் கோழையாகி பின்னடைவதற்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
وَلِيُّهُمَاۗ
அவ்விருவரின் பொறுப்பாளன்
وَعَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைப்பார்களாக
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Iz hammat taaa'ifataani minkum an tafshalaa wallaahu waliyyuhumaa; wa 'alal laahi falyatawakkalil mu'minoon

(அந்த போரில்) உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து ("உஹுத்" என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்த சமயத்தில் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்பவனாக இருந்தான். (ஆகவே!) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக!

Tafseer

وَلَقَدْ
இன்னும் திட்டவட்டமாக
نَصَرَكُمُ
உதவினான்/ உங்களுக்கு
ٱللَّهُ بِبَدْرٍ
அல்லாஹ்/பத்ரில்
وَأَنتُمْ
இன்னும் நீங்கள் இருக்க
أَذِلَّةٌۖ
குறைந்தவர்களாக
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Wa laqad nasarakumul laahu bi-Badrinw wa antum azillatun fattaqul laaha la'allakum tashkuroon

பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்.

Tafseer

إِذْ تَقُولُ
நீர் கூறியபோது
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
أَلَن يَكْفِيَكُمْ
உங்களுக்குப்போதாதா?
أَن يُمِدَّكُمْ
உங்களுக்கு உதவுவது
رَبُّكُم
உங்கள் இறைவன்
بِثَلَٰثَةِ ءَالَٰفٍ
மூவாயிரத்தைக் கொண்டு
مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களிலிருந்து
مُنزَلِينَ
இறக்கப்படுபவர்கள்

Iz taqoolu lilmu'mineena alai yakfiyakum ai-yumiddakum Rabbukum bisalaasati aalaafim minal malaaa'ikati munzaleen

(நபியே! அப்பொழுது) நீங்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "(வானத்திலிருந்து) இறங்கிய மூவாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று கூறியதையும் ஞாபகமூட்டுங்கள்.

Tafseer

بَلَىٰٓۚ
ஆம்
إِن تَصْبِرُوا۟
நீங்கள் பொறுத்தால்
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சினால்
وَيَأْتُوكُم
இன்னும் அவர்கள் வந்தால் /உங்களிடம்
مِّن فَوْرِهِمْ
அவர்களுடைய இதே அவசரத்தில்
يُمْدِدْكُمْ
உங்களுக்குஉதவுவான்
رَبُّكُم
உங்கள் இறைவன்
بِخَمْسَةِ ءَالَٰفٍ
ஐந்தாயிரங்களைக் கொண்டு
مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களிலிருந்து
مُسَوِّمِينَ
அடையாளமிடக் கூடியவர்கள்

Balaaa; in tasbiroo wa tattaqoo wa yaatookum min fawrihim haazaa yumdidkum Rabbukum bikhamsati aalaafim minal malaaa'ikati musawwaimeen

நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறியபோதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான்.

Tafseer

وَمَا جَعَلَهُ
இன்னும் ஆக்கவில்லை/ அதை
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَّا بُشْرَىٰ
தவிர/நற்செய்தியாக
لَكُمْ
உங்களுக்கு
وَلِتَطْمَئِنَّ
இன்னும் நிம்மதி அடைவதற்காக
قُلُوبُكُم
உங்கள் உள்ளங்கள்
بِهِۦۗ
அதன் மூலம்
وَمَا ٱلنَّصْرُ
இன்னும் உதவி இல்லை
إِلَّا
தவிர
مِنْ عِندِ
அல்லாஹ்விடமிருந்து
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
ٱلْحَكِيمِ
ஞானவான்

Wa maa ja'alahul laahu illaa bushraa lakum wa litatma'inna quloobukum bih' wa man-nasru illaa min 'indilllaahil 'Azeezil Hakeem

உங்களுடைய உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியை புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே அன்றி (வேறு யாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது.)

Tafseer

لِيَقْطَعَ
அழிப்பதற்காக
طَرَفًا
ஒரு பகுதியை
مِّنَ
இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
أَوْ يَكْبِتَهُمْ
அல்லது/ அவர்களை கேவலப்படுதுவதர்க்காக
فَيَنقَلِبُوا۟
திரும்புவார்கள்
خَآئِبِينَ
ஆசை நிறைவேறாதவர்களாக

Laiyaqta'a tarafam minal lazeena kafarooo aw yakbitahum fayanqaliboo khaaa'ibeen

(அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான்.

Tafseer

لَيْسَ لَكَ
இல்லை/உமக்கு
مِنَ
இருந்து
ٱلْأَمْرِ
அதிகாரம்
شَىْءٌ
எதுவும்
أَوْ يَتُوبَ
அல்லது மன்னிப்பதற்காக
عَلَيْهِمْ
அவர்களை
أَوْ يُعَذِّبَهُمْ
அல்லது/அவர்களை வேதனை செய்வதற்காக
فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Laisa laka minal amrishai'un aw yatooba 'alaihim aw yu'az zi bahum fa innahum zaalimoon

(நபியே!) இவ்விஷயத்தில் உங்களுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர்களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம்.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَمَا فِى
இன்னும் பூமியிலுள்ளவை
يَغْفِرُ
மன்னிப்பான்
لِمَن
எவருக்கு
يَشَآءُ
நாடுகிறான்
وَيُعَذِّبُ
இன்னும் வேதனைசெய்வான்
مَن
எவர்
يَشَآءُۚ
நாடுகிறான்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Wa lilaahi maa fissamaawaati wa maa fil-ard; yaghfiru limai-yashaaa'u wa yu'azzibu mai-yashaaa'; wallaahu Ghafoorur Raheem

(ஏனென்றால்) வானங்களில் உள்ளவை அனைத்தும், பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களைத் தண்டிப்பான். ஆனால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَأْكُلُوا۟
தின்னாதீர்கள்
ٱلرِّبَوٰٓا۟
வட்டியை
أَضْعَٰفًا
பன்மடங்கு
مُّضَٰعَفَةًۖ
இரட்டிப்பாக்கப்பட்டது
وَٱتَّقُوا۟ ٱللَّهَ
அல்லாஹ்வை அஞ்சுங்கள்
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Yaaa ayyuhal lazeena aamanoo la taakuhur ribaaa ad'aafam mudaa'afatanw wattaqul laaha la'allakum tuflihoon

நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.

Tafseer