Skip to main content

قَالَ
கூறினார்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
يَقُولُ
கூறுகிறான்
إِنَّهَا
நிச்சயமாக அது
بَقَرَةٌ
பசு
لَّا ذَلُولٌ
பயன்படுத்தப்படாதது
تُثِيرُ
உழுவதற்கு
ٱلْأَرْضَ
நிலத்தை
وَلَا تَسْقِى
நீர் இறைக்காது
ٱلْحَرْثَ
விளை நிலத்திற்கு
مُسَلَّمَةٌ
குறையற்றது
لَّا
அறவே இல்லை
شِيَةَ فِيهَاۚ
வடு/அதில்
قَالُوا۟
கூறினார்கள்
ٱلْـَٰٔنَ جِئْتَ
இப்போது/வந்தீர்
بِٱلْحَقِّۚ
உண்மையைக் கொண்டு
فَذَبَحُوهَا
அறுத்தார்கள்/அதை
وَمَا كَادُوا۟
அவர்கள் நெருங்கவில்லை
يَفْعَلُونَ
செய்வார்கள்

Qaala innahoo yaqoolu innahaa baqaratul laa zaloolun tuseerul arda wa laa tasqil harsa musallamatullaa shiyata feehaa; qaalul 'aana jita bilhaqq; fazabahoohaa wa maa kaado yaf'aloon

(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள்.

Tafseer

وَإِذْ قَتَلْتُمْ
இன்னும் சமயம்/கொன்றீர்கள்
نَفْسًا
ஓர் உயிரை
فَٱدَّٰرَْٰٔتُمْ
இன்னும் தர்க்கித்தீர்கள்
فِيهَاۖ
அதில்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
مُخْرِجٌ
வெளியாக்கக்கூடியவன்
مَّا كُنتُمْ
எதை/இருந்தீர்கள்
تَكْتُمُونَ
மறைக்கிறீர்கள்

Wa iz qataltum nafsan faddaara'tum feehaa wallaahu mukrijum maa kuntum taktumoon

நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான்.

Tafseer

فَقُلْنَا
எனவே கூறினோம்
ٱضْرِبُوهُ
அடியுங்கள்/அவரை
بِبَعْضِهَاۚ
கொண்டு/சிலதை/அதில்
كَذَٰلِكَ
அப்படியே
يُحْىِ
உயிர்ப்பிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை
وَيُرِيكُمْ
இன்னும் காண்பிக்கிறான்/உங்களுக்கு
ءَايَٰتِهِۦ
தன் அத்தாட்சிகளை
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக

Faqulnad riboohu biba'dihaa; kazaalika yuhyil laa hul mawtaa wa yureekum aayaatihee la'allakum ta'qiloon

ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதனை அறுத்து) "அதில் ஒரு பாகத்தைக்கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்" என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வாறே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வற்காக அவன் தன்னுடைய (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகின்றான்.

Tafseer

ثُمَّ
பிறகு
قَسَتْ
இறுகிவிட்டன
قُلُوبُكُم
உங்கள் உள்ளங்கள்
مِّنۢ بَعْدِ
பின்னர்/அதற்கு
فَهِىَ
அவை
كَٱلْحِجَارَةِ
போல/கற்கள்
أَوْ
அல்லது
أَشَدُّ
மிகக் கடினமானவை
قَسْوَةًۚ
இறுக்கத்தால்
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
مِنَ ٱلْحِجَارَةِ
கற்களில்
لَمَا
திட்டமாக/எது
يَتَفَجَّرُ
பீறிடுகிறது
مِنْهُ
அதில்
ٱلْأَنْهَٰرُۚ
நதிகள்
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
مِنْهَا
அவற்றில்
لَمَا
திட்டமாக/எது
يَشَّقَّقُ
பிளக்கிறது
فَيَخْرُجُ
இன்னும் வெளியேறுகிறது
مِنْهُ
அதிலிருந்து
ٱلْمَآءُۚ
தண்ணீர்
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
مِنْهَا
அவற்றில்
لَمَا
திட்டமாக/எது
يَهْبِطُ
விழுகிறது
مِنْ خَشْيَةِ
பயத்தால்
ٱللَّهِۗ
அல்லாஹ்வுடைய
وَمَا ٱللَّهُ
இல்லை/அல்லாஹ்
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
عَمَّا
எதைப்பற்றி
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்

Summa qasat quloobukum mim ba'di zaalika fahiya kalhijaarati aw-ashaadu qaswah; wa inna minal hijaarati lamaa yatafajjaru minhul anhaar; wa inna minhaa lamaa yash shaqqaqu fayakhruju minhul maaa'; wa inna minhaa lamaa yahbitu min khashyatil laa; wa mal laahu bighaafilin 'ammaa ta'maloon

இதற்குப் பின்னும் உங்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. (பிளந்தால்) வெடித்து அதிலிருந்து நீர் புறப்படக் கூடியவைகளும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக்கூடியவைகளும் அவற்றில் உண்டு. (ஆனால் யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.

Tafseer

أَفَتَطْمَعُونَ
ஆசைப்படுகிறீர்களா?
أَن يُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கைகொள்வதை
لَكُمْ
உங்களுக்காக
وَقَدْ كَانَ
திட்டமாக இருக்கின்றனர்
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
مِّنْهُمْ
அவர்களில்
يَسْمَعُونَ
செவியுறுகின்றனர்
كَلَٰمَ
பேச்சை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ثُمَّ
பிறகு
يُحَرِّفُونَهُۥ
மாற்றுகின்றனர்/அதை
مِنۢ بَعْدِ
பின்னர்
مَا عَقَلُوهُ
சிந்தித்து புரிந்தனர்/அதை
وَهُمْ
அவர்கள்
يَعْلَمُونَ
அறிகின்றனர்

Afatatma'oona ai yu'minoo lakum wa qad kaana fareequm minhum yasma'oona Kalaamal laahi summa yuharri foonahoo mim ba'di maa'aqaloohu wa hum ya'lamoon

(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்களென நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர்.

Tafseer

وَإِذَا لَقُوا۟
அவர்கள் சந்தித்தால்
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
قَالُوٓا۟
கூறினார்கள்
ءَامَنَّا
நம்பிக்கைகொள்கிறோம்
وَإِذَا خَلَا
தனித்து விட்டால்
بَعْضُهُمْ
சிலர்/அவர்களில்
إِلَىٰ بَعْضٍ
சிலருடன்
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
أَتُحَدِّثُونَهُم
அறிவிக்கிறீர்களா?/அவர்களுக்கு
بِمَا فَتَحَ
எதை/தெரிவித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْكُمْ
உங்களுக்கு
لِيُحَآجُّوكُم
அவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களிடம்
بِهِۦ
அதைக் கொண்டு
عِندَ رَبِّكُمْۚ
உங்கள்இறைவன்முன்
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Wa izaa laqul lazeena aamanoo qaalooo aamannaa wa izaakhalaa ba'duhum ilaa ba'din qaalooo atuhaddisoonahum bimaa fatahal laahu 'alaikum liyuhaajjookum bihee 'inda rabbikum; afalaa ta'qiloon

மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் ("தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி "(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறுகின்றனர்.

Tafseer

أَوَلَا يَعْلَمُونَ
அறிய மாட்டார்களா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிவான்
مَا يُسِرُّونَ
எது/இரகசியமாகப் பேசுகிறார்கள்
وَمَا يُعْلِنُونَ
இன்னும் எது/பகிரங்கப்படுத்துகிறார்கள்

Awalaa ya'lamoona annal laaha ya'lamu maa yusirroona wa maa yu'linoon

அவர்கள் மறைத்துக் கொள்வதையும் பகிரங்கப்படுத்து வதையும் அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா?

Tafseer

وَمِنْهُمْ
அவர்களில்
أُمِّيُّونَ
கல்வி இல்லாதவர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
ٱلْكِتَٰبَ إِلَّآ
வேதத்தை/தவிர
أَمَانِىَّ
வீண் நம்பிக்கைகளை
وَإِنْ هُمْ
இல்லை/அவர்கள்
إِلَّا
தவிர
يَظُنُّونَ
சந்தேகிக்கிறார்கள்

Wa minhum ummiyyoona laa ya'lamoonal kitaaba illaaa amaaniyya wa in hum illaa yazunnoon

அன்றி, கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை.

Tafseer

فَوَيْلٌ
கேடுதான்
لِّلَّذِينَ
எவர்களுக்கு
يَكْتُبُونَ
எழுதுகிறார்கள்
ٱلْكِتَٰبَ
புத்தகத்தை
بِأَيْدِيهِمْ
தங்கள் கரங்களால்
ثُمَّ
பிறகு
يَقُولُونَ
கூறுகிறார்கள்
هَٰذَا مِنْ
இது/இருந்து
عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
لِيَشْتَرُوا۟
அவர்கள் வாங்குவதற்காக
بِهِۦ
அதைக் கொண்டு
ثَمَنًا
கிரயத்தை
قَلِيلًاۖ
சொற்பமான
فَوَيْلٌ
இன்னும் கேடுதான்
لَّهُم
அவர்களுக்கு
مِّمَّا
எதன் காரணமாக
كَتَبَتْ
எழுதியன
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
وَوَيْلٌ
இன்னும் கேடுதான்
لَّهُم
அவர்களுக்கு
مِّمَّا
எதன் காரணமாக
يَكْسِبُونَ
சம்பாதிக்கிறார்கள்

Fawailul lillazeena yaktuboonal kitaaba bi aydddhim summa yaqooloona haazaa min 'indil laahi liyashtaroo bihee samanan qaleelan fawilul lahum mimaa katabat aydeehim wa wailul lahum mimmaa yaksiboon

எவர்கள் தங்கள் கையைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக் கிரயத்தையடைவதற்காக "இது அல்லாஹ் விடமிருந்து வந்ததுதான்" என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்!

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறினர்
لَن تَمَسَّنَا
எங்களை அறவே தீண்டாது
ٱلنَّارُ
நரக நெருப்பு
إِلَّآ
தவிர
أَيَّامًا
நாள்களை
مَّعْدُودَةًۚ
எண்ணப்பட்டவை
قُلْ
கூறுவீராக
أَتَّخَذْتُمْ
எடுத்துக் கொண்டீர்களா?
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
عَهْدًا
ஓர் உறுதிமொழியை
فَلَن يُخْلِفَ
மாற்றவே மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَهْدَهُۥٓۖ
உறுதிமொழியை/தன்
أَمْ
அல்லது
تَقُولُونَ
கூறுகிறீர்கள்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
مَا
எதை
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Wa qaaloo lan tamassanan Naaru illaaa ayyaamam ma'doo dah; qul attakhaztum 'indal laahi 'ahdan falai yukhlifal laahu 'ahdahooo am taqooloona 'alal laahi maa laa ta'lamoon

"ஒரு சில நாள்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என அவர்கள் கூறுகின்றார்கள். (அதற்கு நபியே! அவர்களை) நீங்கள் கேளுங்கள்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கு மாற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கின்றீர்களா?

Tafseer