Skip to main content

سَلْ
கேட்பீராக
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின் சந்ததிகளை
كَمْ
எத்தனை
ءَاتَيْنَٰهُم
கொடுத்தோம்/அவர்களுக்கு
مِّنْ
இருந்து
ءَايَةٍۭ
அத்தாட்சி
بَيِّنَةٍۗ
தெளிவான
وَمَن
இன்னும் எவர்
يُبَدِّلْ
மாற்றுகிறார்
نِعْمَةَ
அருட்கொடையை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
مِنۢ بَعْدِ
தம்மிடம் அது வந்த பின்னர்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
شَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்

Sal Banee Israaa'eela kam aatainaahum min aayatim baiyinah; wa mai yubaddil ni'matal laahi mim ba'di maa jaaa'athu fa innallaaha shadeedul'iqaab

(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளை நீங்கள் கேளுங்கள்: எவ்வளவோ தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். (அவ்வாறிருக்க) எவரேனும் அவைகள் தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன்.

Tafseer

زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டுள்ளது
لِلَّذِينَ
எவர்களுக்கு
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
ٱلدُّنْيَا
உலகம்
وَيَسْخَرُونَ
இன்னும் பரிகசிக்கிறார்கள்
مِنَ ٱلَّذِينَ
எவர்களை
ءَامَنُواۘ
நம்பிக்கை கொண்டார்கள்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ٱتَّقَوْا۟
அல்லாஹ்வை அஞ்சினார்கள்
فَوْقَهُمْ
அவர்களுக்கு மேல்
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
يَرْزُقُ
வழங்குவான்
مَن
எவர்
يَشَآءُ
நாடுகிறான்
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி

Zuyyina lillazeena kafarul hayaatud dunyaa wa yaskharoona minal lazeena aamanoo; wallazeenat taqaw fawqahum yawmal Qiyaamah; wallaahu yarzuqu mai yashaaa'u bighairi hisaab;

நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கின்றது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால் (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான்.

Tafseer

كَانَ
இருந்தார்
ٱلنَّاسُ
மக்கள்
أُمَّةً
ஒரு சமுதாயமாக
وَٰحِدَةً
ஒரே
فَبَعَثَ
ஆகவே அனுப்பினான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களை
مُبَشِّرِينَ
நற்செய்தியாளர்களாக
وَمُنذِرِينَ
இன்னும் எச்சரிப்பவர்களாக
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
مَعَهُمُ
அவர்களுடன்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
بِٱلْحَقِّ
உண்மையான
لِيَحْكُمَ
அது தீர்ப்பளிப்பதற்காக
بَيْنَ
மத்தியில்
ٱلنَّاسِ
மக்களுக்கு
فِيمَا
எதில்
ٱخْتَلَفُوا۟
கருத்து வேறுபட்டார்கள்
فِيهِۚ
அதில்
وَمَا ٱخْتَلَفَ
கருத்து வேறுபடவில்லை
فِيهِ
அதில்
إِلَّا
தவிர
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوهُ
அதைக் கொடுக்கப்பட்டார்கள்
مِنۢ بَعْدِ
அவர்களிடம் வந்த பின்னர்
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான சான்றுகள்
بَغْيًۢا
பொறாமையினால்
بَيْنَهُمْۖ
அவர்களுக்கு மத்தியில்
فَهَدَى
ஆகவே நேர்வழிப்படுத்தினான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களை
لِمَا ٱخْتَلَفُوا۟
அவர்கள் கருத்து வேறுபட்டதற்கு
فِيهِ
அதில்
مِنَ ٱلْحَقِّ
உண்மையிலிருந்து
بِإِذْنِهِۦۗ
தனது கட்டளையினால்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
مَن
எவரை
يَشَآءُ
நாடுகிறான்
إِلَىٰ
பக்கம்
صِرَٰطٍ
பாதையின்
مُّسْتَقِيمٍ
நேரான

Kaanan naasu ummatanw waahidatan fab'asal laahun Nabiyyeena mubashshireena wa munzireena wa anzala ma'ahumul kitaaba bilhaqqi liyahkuma bainan naasi feemakh talafoo feeh; wa makh talafa feehi 'illallazeena ootoohu mim ba'di maa jaaa'athumul baiyinaatu baghyam bainahm fahadal laahul lazeena aamanoo limakh talafoo feehi minal haqqi bi iznih; wallaahu yahdee mai yashaaa'u ilaa Siraatim Mustaqeem

(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவ ராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக (சத்திய) வேதத்தையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதனைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்த சத்திய வேதத்திற்கு) மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப் புறக்கணித்து)விட்ட அந்த சத்தியத்தளவில் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (நேர்) வழி காட்டினான். இன்னும் (இவ்வாறே) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.

Tafseer

أَمْ
அல்லது
حَسِبْتُمْ
நினைத்துக் கொண்டீர்கள்
أَن تَدْخُلُوا۟
நீங்கள் நுழையலாம்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
وَلَمَّا يَأْتِكُم
உங்களுக்கு வராத நிலையில்
مَّثَلُ ٱلَّذِينَ
போன்று/எவர்கள்
خَلَوْا۟
சென்றார்கள்
مِن قَبْلِكُمۖ
உங்களுக்குமுன்
مَّسَّتْهُمُ
அவர்களை பீடித்தன
ٱلْبَأْسَآءُ
கொடிய வறுமை
وَٱلضَّرَّآءُ
இன்னும் நோய்
وَزُلْزِلُوا۟
இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள்
حَتَّىٰ يَقُولَ
வரை/கூறுவார்
ٱلرَّسُولُ
தூதர்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
مَعَهُۥ
அவருடன்
مَتَىٰ
எப்போது
نَصْرُ
உதவி
ٱللَّهِۗ
அல்லாஹ்வுடைய
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ
நிச்சயமாக
نَصْرَ
உதவி
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
قَرِيبٌ
சமீபமானது

Am hasibtum an tadkhulul jannata wa lammaa yaa-tikum masalul lazeena khalaw min qablikum massathumul baasaaa'u waddarraaaa'u wa zulziloo hattaa yaqoolar Rasoolu wallazeena aamanoo ma'ahoo mataa nasrul laah; alaaa inna nasral laahiqareeb

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) "அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)" என்று கேட்டதற்கு "அல்லாஹ் வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது" என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்.

Tafseer

يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
مَاذَا يُنفِقُونَۖ
எதை/அவர்கள் தர்மம் புரியவேண்டும்
قُلْ
கூறு(வீராக)
مَآ
எதை
أَنفَقْتُم
நீங்கள் தர்மம் புரிந்தாலும்
مِّنْ
இருந்து
خَيْرٍ
செல்வம்
فَلِلْوَٰلِدَيْنِ
பெற்றோருக்கு
وَٱلْأَقْرَبِينَ
இன்னும் உறவினர்கள்
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகள்
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகள்
وَٱبْنِ ٱلسَّبِيلِۗ
இன்னும் வழிப்போக்கர்(கள்)
وَمَا
இன்னும் எதை
تَفْعَلُوا۟
நீங்கள் செய்தாலும்
مِنْ خَيْرٍ
நன்மையிலிருந்து
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بِهِۦ
அதை
عَلِيمٌ
மிக அறிபவன்

Yas'aloonaka maazaa yunfiqoona qul maaa anfaqtum min khairin falil waalidaini wal aqrabeena walyataamaa wal masaakeeni wabnis sabeel; wa maa taf'aloo min khairin fa innal laaha bihee 'Aleem

(நபியே! பொருள்களில்) "எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)" என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) "நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்.

Tafseer

كُتِبَ
கடமையாக்கப்பட்டது
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْقِتَالُ
போர்
وَهُوَ
அதுவோ
كُرْهٌ
சிரமமானது
لَّكُمْۖ
உங்களுக்கு
وَعَسَىٰٓ أَن
இன்னும் நீங்கள் வெறுக்கலாம்
شَيْـًٔا
ஒன்றை
وَهُوَ
அதுவோ
خَيْرٌ
சிறந்தது
لَّكُمْۖ
உங்களுக்கு
وَعَسَىٰٓ أَن
இன்னும் நீங்கள் விரும்பலாம்
شَيْـًٔا
ஒன்றை
وَهُوَ
அதுவோ
شَرٌّ
தீமையாகும்
لَّكُمْۗ
உங்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
يَعْلَمُ
அறிவான்
وَأَنتُمْ
நீங்கள்
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Kutiba alaikumulqitaalu wa huwa kurhullakum wa 'asaaa an takrahoo shai'anw wa huwa khairullakum wa 'asaaa an tuhibbo shai'anw wa huwa sharrullakum; wallaahu ya'lamu wa antum laa ta'lamoon

(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

Tafseer

يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
عَنِ ٱلشَّهْرِ
மாதம் பற்றி
ٱلْحَرَامِ
புனிதமான
قِتَالٍ
போர் புரிவது
فِيهِۖ
அதில்
قُلْ
கூறுவீராக
قِتَالٌ
போர் புரிவது
فِيهِ
அதில்
كَبِيرٌۖ
பெரியது
وَصَدٌّ
இன்னும் தடுப்பது
عَن
விட்டு
سَبِيلِ
பாதை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَكُفْرٌۢ
இன்னும் நிராகரிப்பது
بِهِۦ
அவனை
وَٱلْمَسْجِدِ
இன்னும் அல்மஸ்ஜிது
ٱلْحَرَامِ
புனிதமான
وَإِخْرَاجُ
இன்னும் வெளியேற்றுவது
أَهْلِهِۦ
அதில் வசிப்போரை
مِنْهُ
அதிலிருந்து
أَكْبَرُ
மிகப் பெரியது
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடத்தில்
وَٱلْفِتْنَةُ
இன்னும் இணைவைத்தல்
أَكْبَرُ
மிகப் பெரியது
مِنَ ٱلْقَتْلِۗ
கொலையை விட
وَلَا يَزَالُونَ
உங்களிடம் ஓயாது போர் புரிந்துகொண்டே இருப்பார்கள்
حَتَّىٰ
வரை
يَرُدُّوكُمْ
உங்களைத் திருப்புவார்கள்
عَن
விட்டு
دِينِكُمْ
உங்கள் மார்க்கம்
إِنِ ٱسْتَطَٰعُوا۟ۚ
அவர்கள் சக்தி பெற்றால்
وَمَن
இன்னும் எவர்
يَرْتَدِدْ
மாறிவிடுகிறார்(கள்)
مِنكُمْ
உங்களிலிருந்து
عَن
விட்டு
دِينِهِۦ
அவருடைய மார்க்கம்
فَيَمُتْ
அவர் இறக்கிறார்
وَهُوَ
அவர்(கள்)
كَافِرٌ
நிராகரிப்பாளர்(கள்)
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
حَبِطَتْ
அழிந்துவிடும்
أَعْمَٰلُهُمْ
அவர்களின் செயல்கள்
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
وَٱلْءَاخِرَةِۖ
இன்னும் மறுமை
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Yas'aloonaka 'anish Shahril Haraami qitaalin feehi qul qitaahun feehi kabeerunw wa saddun 'an sabeelil laahi wa kufrum bihee wal Masjidil Haraami wa ikhraaju ahlihee minhu akbaru 'indal laah; walfitnatu akbaru minal qatl; wa laa yazaaloona yuqaatiloonakum hatta yaruddookum 'an deenikum inis tataa'oo; wa mai yartadid minkum 'an deenihee fayamut wahuwa kaafirun fa ulaaa'ika habitat a'maaluhum fid dunyaa wal aakhirati wa ulaaa'ika ashaabun Naari hum feehaa khaalidoon

(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவைகளில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும் (நம்பிக்கையாளர்களே! காஃபிர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்களுடைய மார்க்கத்திலிருந்து திருப்பிவிடும் வரையில் உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன்னுடைய மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப்பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். தவிர, அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
هَاجَرُوا۟
ஹிஜ்ரத் செய்தார்கள்
وَجَٰهَدُوا۟
இன்னும் ஜிஹாது செய்தார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يَرْجُونَ
ஆதரவு வைக்கிறார்கள்
رَحْمَتَ
கருணையை
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Innal lazeena aamanoo wallazeena haajaroo wa jaahadoo fee sabeelil laahi ulaaaika yarjoona rahmatal laah; wallaahu Ghafoorur Raheem

எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (காஃபிர்களின் துன்பத்தால் "மக்கா"வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும் தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான்.

Tafseer

يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
عَنِ ٱلْخَمْرِ
மதுவைப் பற்றி
وَٱلْمَيْسِرِۖ
இன்னும் சூதாட்டம்
قُلْ
கூறுவீராக
فِيهِمَآ
அவ்விரண்டிலும்
إِثْمٌ كَبِيرٌ
பாவம்/பெரியது
وَمَنَٰفِعُ
இன்னும் பலன்கள்
لِلنَّاسِ
மக்களுக்கு
وَإِثْمُهُمَآ
அவ்விரண்டின்பாவம்
أَكْبَرُ
மிகப் பெரியது
مِن
விட
نَّفْعِهِمَاۗ
அவ்விரண்டின் பலன்
وَيَسْـَٔلُونَكَ
இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
مَاذَا
எது
يُنفِقُونَ
தர்மம் செய்வார்கள்
قُلِ
கூறுவீராக
ٱلْعَفْوَۗ
மீதமுள்ளதை
كَذَٰلِكَ
இவ்வாறே
يُبَيِّنُ
விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
நீங்கள் சிந்திப்பதற்காக

Yas'aloonaka 'anilkhamri walmaisiri qul feehimaaa ismun kabeerunw wa manaafi'u linnaasi wa ismuhumaa akbaru min naf'ihimaa; wa yas'aloonaka maaza yunfiqoona qulil-'afw; kazaalika yubaiyinul laahu lakumul-aayaati la'allakum tatafakkaroon

(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர் களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவைகளில் உள்ள பாவம் அவைகளிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. அன்றி, (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் "(அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)" என கூறுங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை) களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றான்.

Tafseer

فِى ٱلدُّنْيَا
இம்மையில்
وَٱلْءَاخِرَةِۗ
இன்னும் மறுமை
وَيَسْـَٔلُونَكَ
இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
عَنِ ٱلْيَتَٰمَىٰۖ
அநாதைகள் பற்றி
قُلْ
கூறுவீராக
إِصْلَاحٌ
சீர்திருத்துவது
لَّهُمْ
அவர்களை
خَيْرٌۖ
மிக நன்றே
وَإِن تُخَالِطُوهُمْ
இன்னும் நீங்கள் சேர்த்துக் கொண்டால்/அவர்களை
فَإِخْوَٰنُكُمْۚ
உங்கள் சகோதரர்கள்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
يَعْلَمُ
அறிவான்
ٱلْمُفْسِدَ
சீர்கெடுப்பவனை
مِنَ
இருந்து
ٱلْمُصْلِحِۚ
சீர்செய்பவன்
وَلَوْ شَآءَ
(அவன்) நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَأَعْنَتَكُمْۚ
சிரமப்படுத்தி இருப்பான்/உங்களை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Fid dunyaa wal aakhirah; wa yas'aloonaka 'anil yataamaa qul islaahullahum khayr, wa in tukhaalitoohum fa ikhwaanukum; wallaahu ya'lamul mufsida minalmuslih; wa law shaaa'al laahu la-a'natakum; innal laaha 'Azeezun Hakeem

(நபியே!) அநாதைகளைப் (வளர்ப்பதைப்) பற்றியும் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்களுடைய சகோதரர்களே! (ஆதலால் அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், "நன்மை செய்வோம்" என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) கஷ்டத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவனும், நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.)

Tafseer