Skip to main content

وَمِنْهُم
அவர்களில்
مَّن
எவர்
يَقُولُ
கூறுகிறார்
رَبَّنَآ
எங்கள் இறைவா
ءَاتِنَا
எங்களுக்குத் தா
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
حَسَنَةً
அழகியதை
وَفِى ٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையில்
حَسَنَةً
அழகியதை
وَقِنَا
இன்னும் காத்துக்கொள்/ எங்களை
عَذَابَ
வேதனையிலிருந்து
ٱلنَّارِ
(நரக) நெருப்பின்

Wa minhum mai yaqoolu rabbanaaa aatina fid dunyaa hasanatawn wa fil aakhirati hasanatanw wa qinaa azaaban Naar

அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَهُمْ
அவர்களுக்கு
نَصِيبٌ
பங்கு
مِّمَّا
எதிலிருந்து
كَسَبُوا۟ۚ
செய்தார்கள்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
سَرِيعُ
விரைவானவன்
ٱلْحِسَابِ
கணக்கிடுவதில்/ விசாரணையில்

Ulaaa'ika lahum naseebum mimmaa kasaboo; wal laahu saree'ul hisaab

தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகு விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமன்று).

Tafseer

وَٱذْكُرُوا۟
இன்னும் நினைவு கூருங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
فِىٓ أَيَّامٍ
நாள்களில்
مَّعْدُودَٰتٍۚ
எண்ணப்பட்டவை
فَمَن
இன்னும் எவர்
تَعَجَّلَ
அவசரப்பட்டார்
فِى يَوْمَيْنِ
இரண்டு நாள்களில்
فَلَآ إِثْمَ
அறவே பாவமில்லை
عَلَيْهِ
அவர் மீது
وَمَن تَأَخَّرَ
இன்னும் எவர்/தாமதித்தார்
فَلَآ إِثْمَ
அறவே பாவமில்லை
عَلَيْهِۚ
அவர் மீது
لِمَنِ
எவருக்கு
ٱتَّقَىٰۗ
அஞ்சினார்
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறிந்துகொள்ளுங்கள்
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
إِلَيْهِ
அவனிடமே
تُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவீர்கள்

Wazkurul laaha feee ayyaamim ma'doodaat; faman ta'ajjala fee yawmaini falaaa ismaa 'alaihi wa man taakhkhara falaaa isma 'alayh; limanit-taqaa; wattaqul laaha wa'lamooo annakum ilaihi tuhsharoon

(நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜு மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள் வரை ("மினா" என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை "திக்ரு" செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறை அச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்.

Tafseer

وَمِنَ ٱلنَّاسِ
இன்னும் மக்களில்
مَن
எவர்
يُعْجِبُكَ
வியக்க வைக்கிறது/உம்மை
قَوْلُهُۥ
அவனுடைய பேச்சு
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையைப் பற்றி
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
وَيُشْهِدُ
இன்னும் சாட்சியாக்குவான்
ٱللَّهَ
அல்லாஹ்வை
عَلَىٰ
மீது
مَا فِى
எது/அவனுடைய உள்ளத்தில்
وَهُوَ
அவன்
أَلَدُّ
கடுமையான வாதி
ٱلْخِصَامِ
வாதிகளில்

Wa minan naasi mai yu'jibuka qawluhoo fil hayaatid dunyaa wa yushhidul laaha 'alaa maa fee qalbihee wa huwa aladdulkhisaam

(நபியே! உங்களிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும்பொழுது) தன்னுடைய (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உங்கள்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். (உண்மையில்) அவன்தான் (உங்களுக்குக்) கொடிய எதிரியாவான்.

Tafseer

وَإِذَا تَوَلَّىٰ
இன்னும் அவன் திரும்பிச் சென்றால்
سَعَىٰ
முயற்சிக்கிறான்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
لِيُفْسِدَ فِيهَا
அவன் விஷமம் செய்வதற்காக/அதில்
وَيُهْلِكَ
இன்னும் அழிக்கிறான்
ٱلْحَرْثَ
விளை நிலத்தை
وَٱلنَّسْلَۗ
இன்னும் கால்நடையை
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يُحِبُّ
விரும்ப மாட்டான்
ٱلْفَسَادَ
விஷமத்தை

Wa izaa tawallaa sa'aa fil ardi liyufsida feeha wa yuhlikal harsa wannasl; wallaahu laa yuhibbul fasaad

அவன் (உங்களிலிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கின்றான். விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.

Tafseer

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُ
அவனுக்கு
ٱتَّقِ
அஞ்சிக்கொள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
أَخَذَتْهُ
அவனைப் பிடித்துக் கொள்கிறது
ٱلْعِزَّةُ
பெருமை
بِٱلْإِثْمِۚ
பாவத்தைக் கொண்டு
فَحَسْبُهُۥ
எனவே அவனுக்குப்போதும்
جَهَنَّمُۚ
நரகம்
وَلَبِئْسَ
இன்னும் திட்டமாக கெட்டுவிட்டது
ٱلْمِهَادُ
தங்குமிடம்

Wa izaa qeela lahuttaqil laaha akhazathul izzatu bil-ism; fahasbuhoo jahannam; wa labi'sal mihaad

தவிர, "நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)" என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக் கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.

Tafseer

وَمِنَ ٱلنَّاسِ
இன்னும் மக்களில்
مَن
எவர்
يَشْرِى
விற்கிறார்
نَفْسَهُ
தன் உயிரை
ٱبْتِغَآءَ
தேடுதல்
مَرْضَاتِ
பொருத்தம்
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَٱللَّهُ
அல்லாஹ்
رَءُوفٌۢ
மிக இரக்கமுடையவன்
بِٱلْعِبَادِ
அடியார்கள் மீது

Wa minan naasi mai yashree nafsahub tighaaa'a mardaatil laah; wallaahu ra'oofum bil'ibaad

அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
فِى ٱلسِّلْمِ
இஸ்லாமில்
كَآفَّةً
முழுமையாக
وَلَا تَتَّبِعُوا۟
இன்னும் பின்பற்றாதீர்கள்
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَكُمْ
உங்களுக்கு
عَدُوٌّ
எதிரி
مُّبِينٌ
பகிரங்கமான

Yaaa ayyuhal lazeena aamanud khuloo fis silmi kaaaffatanw wa laa tattabi'oo khutuwaatish Shaitaan; innahoo lakum 'aduwwum mubeen

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.

Tafseer

فَإِن زَلَلْتُم
நீங்கள் சறுகினால்
مِّنۢ بَعْدِ
பின்னர்/வந்தது/உங்களிடம்
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான சான்றுகள்
فَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Fa in zalaltum mimba'di maa jaaa'atkumul baiyinaatu fa'lamoo annallaaha 'Azeezun hakeem

(மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்தபின்னும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்தவேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

هَلْ يَنظُرُونَ
எதிர்பார்க்கிறார்களா?
إِلَّآ
தவிர
أَن يَأْتِيَهُمُ
அவர்களிடம்வருவதை
ٱللَّهُ
அல்லாஹ்
فِى ظُلَلٍ
நிழல்களில்
مِّنَ ٱلْغَمَامِ
மேகங்களின்
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
وَقُضِىَ
இன்னும் முடிக்கப்பட்டது
ٱلْأَمْرُۚ
காரியம்
وَإِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
تُرْجَعُ
திருப்பப்படும்
ٱلْأُمُورُ
காரியங்கள்

Hal yanzuroona illaaa ai yaatiyahumul laahu fee zulalim minal ghamaami walmalaaa'ikatu wa qudiyal amr; wa ilal laahi turja'ulumoor

(நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களையும் நிராகரிக்கும் அவர்கள்) அல்லாஹ்வும் மலக்குகளும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படும்.

Tafseer