Skip to main content

وَٱقْتُلُوهُمْ
இன்னும் அவர்களைக் கொல்லுங்கள்
حَيْثُ ثَقِفْتُمُوهُمْ
இடம்/அவர்களைப் பார்த்தீர்கள்
وَأَخْرِجُوهُم
இன்னும் அவர்களை வெளியேற்றுங்கள்
مِّنْ حَيْثُ
அவர்கள் உங்களை வெளியேற்றியவாறே
وَٱلْفِتْنَةُ
இன்னும் இணைவைத்தல்
أَشَدُّ
மிகக் கடுமையானது
مِنَ
விட
ٱلْقَتْلِۚ
கொலை
وَلَا تُقَٰتِلُوهُمْ
போர் புரியாதீர்கள்/அவர்களிடம்
عِندَ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதின் அருகில்
ٱلْحَرَامِ
புனிதமான
حَتَّىٰ يُقَٰتِلُوكُمْ
அவர்கள் உங்களிடம் போர் புரியும் வரை
فِيهِۖ فَإِن
அதில்/அவர்கள் உங்களிடம் போரிட்டால்
فَٱقْتُلُوهُمْۗ
அவர்களைக் கொல்லுங்கள்
كَذَٰلِكَ جَزَآءُ
இப்படித்தான்/கூலி
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களின்

Waqtuloohum haisu saqif tumoohum wa akhrijoohum min haisu akhrajookum; walfitnatu ashaddu minal qatl; wa laa tuqaatiloohum 'indal Majidil Haraami hattaa yaqaatilookum feehi fa in qaatalookum faqtuloohum; kazaalika jazaaa'ul kaafireen

ஆகவே (உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே!

Tafseer

فَإِنِ ٱنتَهَوْا۟
அவர்கள் விலகிக் கொண்டால்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Fa ini-ntahaw fa innal laaha Ghafoorur Raheem

(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَقَٰتِلُوهُمْ
இன்னும் அவர்களிடம் போர் புரியுங்கள்
حَتَّىٰ لَا
நீங்கும் வரை
فِتْنَةٌ
இணைவைத்தல்
وَيَكُونَ ٱلدِّينُ
இன்னும் ஆகும்/வழிபாடு
لِلَّهِۖ
அல்லாஹ்வுக்கு
فَإِنِ ٱنتَهَوْا۟
அவர்கள் விலகிக் கொண்டால்
فَلَا عُدْوَٰنَ
அறவே இல்லை/அத்துமீறல்
إِلَّا عَلَى
தவிர/மீது
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Wa qaatiloohum hatta laa takoona fitnatunw wa yakoonad deenu lillaahi fa-inin tahaw falaa 'udwaana illaa 'alaz zaalimeen

அன்றி, (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது.

Tafseer

ٱلشَّهْرُ
மாதம்
ٱلْحَرَامُ
புனித(மான)
بِٱلشَّهْرِ
மாதத்திற்குப்பதிலாகும்
ٱلْحَرَامِ
புனித(மான)
وَٱلْحُرُمَٰتُ
இன்னும் புனிதங்கள்
قِصَاصٌۚ
பழிதீர்க்கப்பட வேண்டும்
فَمَنِ
ஆகவே யார்
ٱعْتَدَىٰ
வரம்பு மீறினார்
عَلَيْكُمْ
உங்கள் மீது
فَٱعْتَدُوا۟
வரம்பு மீறுங்கள்
عَلَيْهِ
அவர் மீது
بِمِثْلِ مَا
அவர் வரம்பு மீறியது போன்று
عَلَيْكُمْۚ
உங்கள் மீது
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறிந்து கொள்ளுங்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
مَعَ
உடன்
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்

Ash Shahrul Haraamu bish Shahril Haraami wal hurumaatu qisaas; famani'tadaa 'alaikum fa'tadoo 'alaihi bimsisli ma'tadaa 'alaikum; wattaqul laaha wa'lamooo annal laaha ma'al muttaqeen

(போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَأَنفِقُوا۟
இன்னும் தர்மம் புரியுங்கள்
فِى سَبِيلِ
அல்லாஹ்வின் பாதையில்
وَلَا تُلْقُوا۟
இன்னும் போடாதீர்கள்
بِأَيْدِيكُمْ
உங்கள் கரங்களை
إِلَى ٱلتَّهْلُكَةِۛ
அழிவில்
وَأَحْسِنُوٓا۟ۛ
இன்னும் நல்லறம் புரியுங்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோரை

Wa anfiqoo fee sabeelil laahi wa laa tulqoo bi aydeekum ilat tahlukati wa ahsinoo; innal laaha yuhibbul muhsineen

நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள். தவிர, (போர் சமயத்தில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான்.

Tafseer

وَأَتِمُّوا۟
இன்னும் முழுமையாக்குங்கள்
ٱلْحَجَّ
ஹஜ்ஜை
وَٱلْعُمْرَةَ
இன்னும் உம்றாவை
لِلَّهِۚ
அல்லாஹ்வுக்காக
فَإِنْ أُحْصِرْتُمْ
நீங்கள் தடுக்கப்பட்டால்
فَمَا ٱسْتَيْسَرَ
எது/சாத்தியமாகியது
مِنَ
இருந்து
ٱلْهَدْىِۖ
பலி(கள்)
وَلَا تَحْلِقُوا۟
இன்னும் சிரைக்காதீர்கள்
رُءُوسَكُمْ
உங்கள் தலைகளை
حَتَّىٰ
வரை
يَبْلُغَ
அடைகிறது
ٱلْهَدْىُ
பலி
مَحِلَّهُۥۚ
தன் இடத்தை
فَمَن
இன்னும் எவர்
كَانَ
இருக்கிறார்
مِنكُم
உங்களில்
مَّرِيضًا
நோயாளியாக
أَوْ
அல்லது
بِهِۦٓ
அவருக்கு
أَذًى
ஓர் இடையூறு/காயம், சிரங்கு
مِّن رَّأْسِهِۦ
அவருடையதலையில்
فَفِدْيَةٌ
ஆகவே பரிகாரம்
مِّن
இருந்து
صِيَامٍ
நோன்பு
أَوْ
அல்லது
صَدَقَةٍ
தர்மம்
أَوْ نُسُكٍۚ
அல்லது பலி
فَإِذَآ أَمِنتُمْ
நீங்கள் பாதுகாப்புப் பெற்றால்
فَمَن
இன்னும் எவர்
تَمَتَّعَ
சுகம் அனுபவித்தார்
بِٱلْعُمْرَةِ
உம்றாவைக் கொண்டு
إِلَى ٱلْحَجِّ
ஹஜ்ஜு வரை
فَمَا ٱسْتَيْسَرَ
எது/சாத்தியமானது
مِنَ ٱلْهَدْىِۚ
பலியிலிருந்து
فَمَن
எனவே எவர்
لَّمْ يَجِدْ
பெறவில்லை
فَصِيَامُ
ஆகவே நோன்பு
ثَلَٰثَةِ أَيَّامٍ
மூன்று நாள்கள்
فِى ٱلْحَجِّ
ஹஜ்ஜில்
وَسَبْعَةٍ
இன்னும் ஏழு
إِذَا رَجَعْتُمْۗ
நீங்கள் திரும்பினால்
تِلْكَ عَشَرَةٌ
அவை/பத்து
كَامِلَةٌۗ
முழுமையான
ذَٰلِكَ لِمَن
இது/எவருக்கு
لَّمْ يَكُنْ
இருக்கவில்லை
أَهْلُهُۥ
அவருடைய குடும்பம்
حَاضِرِى
வசிப்பவர்களாக
ٱلْمَسْجِدِ
அல் மஸ்ஜிது
ٱلْحَرَامِۚ
புனிதமான
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறிந்துகொள்ளுங்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
شَدِيدُ
மிகக்கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்

Wa atimmul Hajja wal Umarata lillaah; fain uhsirtum famas taisara minal hadyi walaa tahliqoo ru'oosakum hatta yablughal hadyu mahillah; faman kaana minkum mareedan aw biheee azam mir raasihee fafidyatum min Siyaamin aw sadaqatin aw nusuk; fa izaaa amintum faman tamatta'a bil 'Umrati ilal Hajji famastaisara minal hady; famal lam yajid fa Siyaamu salaasti ayyaamin fil Hajji wa sab'atin izaa raja'tum; tilka 'asharatun kaamilah; zaalika limal lam yakun ahluhoo haadiril Masjidil Haraam; wattaqul laaha wa'lamoo annal laaha shadeedul'iqaab

அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால் (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் "ஹத்யு" (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும் வரையில் நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவைகளால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும் அல்லது (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். அன்றி (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜு செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில் இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜுடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

ٱلْحَجُّ
ஹஜ்ஜு
أَشْهُرٌ
மாதங்கள்
مَّعْلُومَٰتٌۚ
அறியப்பட்டவை
فَمَن
ஆகவே எவர்
فَرَضَ
கடமையாக்கினார்
فِيهِنَّ ٱلْحَجَّ
அவற்றில் ஹஜ்ஜை
فَلَا رَفَثَ
அறவே இல்லை/தாம்பத்திய உறவு
وَلَا فُسُوقَ
இன்னும் அறவே இல்லை/தீச்சொல் பேசுதல்
وَلَا جِدَالَ
இன்னும் அறவே இல்லை/தர்க்கம்
فِى ٱلْحَجِّۗ
ஹஜ்ஜில்
وَمَا تَفْعَلُوا۟
நீங்கள் எதைச் செய்தாலும்
مِنْ خَيْرٍ
நன்மையில்
يَعْلَمْهُ
அதை அறிவான்
ٱللَّهُۗ
அல்லாஹ்
وَتَزَوَّدُوا۟
இன்னும் கட்டுச்சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
فَإِنَّ
ஆகவே நிச்சயமாக
خَيْرَ
சிறந்தது
ٱلزَّادِ
கட்டுச்சாதத்தில்
ٱلتَّقْوَىٰۚ
அல்லாஹ்வை அஞ்சுவதுதான்
وَٱتَّقُونِ
இன்னும் என்னை அஞ்சுங்கள்
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவாளிகளே

Al-Hajju ashhurum ma'-loomaat; faman farada feeinnal hajja falaa rafasa wa laa fusooqa wa laa jidaala fil Hajj; wa maa taf'aloo min khairiny ya'lamhul laah; wa tazawwadoo fa inna khairaz zaadit taqwaa; wattaqooni yaaa ulil albaab

ஹஜ்ஜு (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்களில்தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜு (மாதத்தின் பத்தாம் தேதி) வரையில் வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜுடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக் கொள்ள வேண்டியவை களில் எல்லாம் மிக மேலானது இறை அச்சத்தைத்தான். ஆதலால் அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.

Tafseer

لَيْسَ
இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
جُنَاحٌ
குற்றம்
أَن تَبْتَغُوا۟
நீங்கள் தேடிக் கொள்வது
فَضْلًا
அருளை
مِّن
இருந்து
رَّبِّكُمْۚ
உங்கள் இறைவன்
فَإِذَآ أَفَضْتُم
நீங்கள் புறப்பட்டால்
مِّنْ
இருந்து
عَرَفَٰتٍ
அரஃபாத்
فَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
عِندَ
அருகில்
ٱلْمَشْعَرِ ٱلْحَرَامِۖ
அல்மஷ்அருல்ஹராம்
وَٱذْكُرُوهُ
இன்னும் அவனை நினைவு கூருங்கள்
كَمَا هَدَىٰكُمْ
உங்களை அவன் நேர்வழிப்படுத்தியதற்காக
وَإِن
இன்னும் நிச்சயமாக
كُنتُم
இருந்தீர்கள்
مِّن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
لَمِنَ ٱلضَّآلِّينَ
வழி தவறியவர்களில்தான்

Laisa 'alaikum junaahun an tabtaghoo fad lam mir rabbikum; fa izaaa afadtum min 'Arafaatin fazkurul laaha 'indal-Mash'aril Haraami waz kuroohu kamaa hadaakum wa in kuntum min qablihee laminad daaaleen

(ஹஜ்ஜு பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. அன்றி, (ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் "மஷ்அருல் ஹராம்" என்னும் இடத்தில் அல்லாஹ்வைத் திக்ரு செய்யுங்கள். தவிர, நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களாக இருந்தபொழுது உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காக பின்னும் அவனைத் "திக்ரு" செய்யுங்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَفِيضُوا۟
புறப்படுங்கள்
مِنْ حَيْثُ
இடத்திலிருந்து
أَفَاضَ
புறப்பட்டார்(கள்)
ٱلنَّاسُ
மக்கள்
وَٱسْتَغْفِرُوا۟
இன்னும் மன்னிப்புக்கோருங்கள்
ٱللَّهَۚ
அல்லாஹ்விடம்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Summa afeedoo min haisu afaadan naasu wastagh firullaah; innnal laaha Ghafoo rur-Raheem

பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற ("முஸ்தலிபா" என்னும்) இடத்திலிருந்து நீங்களும் ("மினா"வுக்குத்) திரும்பிவிடுங்கள். மேலும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

فَإِذَا قَضَيْتُم
நீங்கள் நிறைவேற்றிவிட்டால்
مَّنَٰسِكَكُمْ
உங்கள் ஹஜ்ஜு கடமைகளை
فَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
كَذِكْرِكُمْ
நீங்கள் நினைவு கூர்ந்ததைப் போல
ءَابَآءَكُمْ
மூதாதைகளை/உங்கள்
أَوْ
அல்லது
أَشَدَّ
கடுமையாக
ذِكْرًاۗ
நினைவு கூர்தல்
فَمِنَ
இன்னும் இருந்து
ٱلنَّاسِ
மக்கள்
مَن
எவர்
يَقُولُ
கூறுகிறார்
رَبَّنَآ
எங்கள் இறைவா
ءَاتِنَا
எங்களுக்குத் தா
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
وَمَا
இல்லை
لَهُۥ
அவருக்கு
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
مِنْ
இருந்து
خَلَٰقٍ
பாக்கியம்

Fa-izan qadaitum manaa sikakum fazkurul laaha kazikrikum aabaaa'akum aw ashadda zikraa; faminannaasi mai yaqoolu Rabbanaaa aatinaa fiddunyaa wa maa lahoo fil Aakhirati min khalaaq

(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் உங்களுடைய (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டு பெருமையாகக்) கூறி வந்ததைப்போல் அல்லது அதனைவிட அதிகமாக அல்லாஹ்வைத் "திக்ரு" (செய்து உங்களுக்கு வேண்டியவைகளையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக!" என்று கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. ஆனால், இத்தகையவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.

Tafseer