Skip to main content

فَمَنۢ
எவர்
بَدَّلَهُۥ
அதை மாற்றுவார்
بَعْدَمَا سَمِعَهُۥ
அதைக் கேட்டதற்குப் பின்னர்
فَإِنَّمَآ إِثْمُهُۥ
அதன் பாவமெல்லாம்
عَلَى
மீது
ٱلَّذِينَ
எவர்கள்
يُبَدِّلُونَهُۥٓۚ
மாற்றுகிறார்கள்/அதை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
மிக அறிந்தவன்

Famam baddalahoo ba'da maa sami'ahoo fa innamaaa ismuhoo 'alallazeena yubaddi loonah; innallaha Samee'un 'Aleem

(மரண சாசனமாகிய) அதனைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதனை மாற்றிவிட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) செவியுறுபவனாகவும், (அதனை மாற்றும் பாவிகளின் செயலை) அறிந்தவனுமாயிருக்கின்றான்.

Tafseer

فَمَنْ
எவர்
خَافَ
பயந்தார்
مِن مُّوصٍ
மரணசாசனம்கூறுபவரிடத்தில்
جَنَفًا
அநீதியை
أَوْ
அல்லது
إِثْمًا
தவறை
فَأَصْلَحَ
சீர்திருத்தம் செய்தார்
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
فَلَآ إِثْمَ
அறவே குற்றமில்லை
عَلَيْهِۚ
அவர் மீது
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Faman khaafa mim moosin janafan aw isman fa aslaha bainahum falaaa ismaa 'alayh; innal laaha Ghafooru Raheem

ஆனால் மரணசாசனம் கூறியவரி(ன் சாசனத்தி)ல் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து, அந்த சாசனப் பொருளை அடையக்கூடிய)வர்களுக்கிடையே சமாதானம் செய்து அதனை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
كُتِبَ
கடமையாக்கப்பட்டது
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلصِّيَامُ
நோன்பு
كَمَا
போன்று
كُتِبَ
கடமையாக்கப்பட்டது
عَلَى
மீது
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

Yaa ayyuhal lazeena aamanoo kutiba 'alaikumus Siyaamu kamaa kutiba 'alal lazeena min qablikum la'allakum tattaqoon

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.

Tafseer

أَيَّامًا
நாட்களில்
مَّعْدُودَٰتٍۚ
எண்ணப்பட்ட(வை)
فَمَن
எவர்
كَانَ
இருந்தார்
مِنكُم
உங்களில்
مَّرِيضًا
நோயாளியாக
أَوْ
அல்லது
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
فَعِدَّةٌ
கணக்கிடவும்
مِّنْ أَيَّامٍ
நாட்களில்
أُخَرَۚ
மற்ற(வை)
وَعَلَى
இன்னும் மீது
ٱلَّذِينَ
எவர்கள்
يُطِيقُونَهُۥ
அதற்கு சிரமப்படுகிறார்கள்
فِدْيَةٌ
பரிகாரம்
طَعَامُ
உணவு
مِسْكِينٍۖ
ஓர் ஏழையின்
فَمَن
எவர்
تَطَوَّعَ
உபரியாகச் செய்வார்
خَيْرًا
நன்மையை
فَهُوَ
அது
خَيْرٌ
நன்மை
لَّهُۥۚ
அவருக்கு
وَأَن تَصُومُوا۟
இன்னும் நீங்கள் நோன்பு நோற்பது
خَيْرٌ
மிகச் சிறந்தது
لَّكُمْۖ
உங்களுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْلَمُونَ
அறிந்தவர்களாக (அறிவீர்கள்)

Ayyaamam ma'doodaat; faman kaana minkum mareedan aw'alaa safarin fa'iddatum min ayyaamin ukhar; wa 'alal lazeena yuteeqoonahoo fidyatun ta'aamu miskeenin faman tatawwa'a khairan fahuwa khairulo lahoo wa an tasoomoo khairul lakum in kuntum ta'lamoon

குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். தவிர, (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதைவிட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்).

Tafseer

شَهْرُ
மாதம்
رَمَضَانَ
ரமழான்
ٱلَّذِىٓ
எது
أُنزِلَ
இறக்கப்பட்டது
فِيهِ
அதில்
ٱلْقُرْءَانُ
அல்குர்ஆன்
هُدًى
நேர்வழியாக
لِّلنَّاسِ
மக்களுக்கு
وَبَيِّنَٰتٍ
இன்னும் சான்றுகளாக
مِّنَ ٱلْهُدَىٰ
நேர்வழியின்
وَٱلْفُرْقَانِۚ
இன்னும் பிரித்தறிவிப்பது
فَمَن شَهِدَ
எவர்/தங்கி இருப்பார்
مِنكُمُ
உங்களிலிருந்து
ٱلشَّهْرَ
அம்மாதத்தில்
فَلْيَصُمْهُۖ
அவர் அதில் நோன்பிருக்கவும்
وَمَن كَانَ
இன்னும் எவர்/இருப்பார்
مَرِيضًا
நோயாளியாக
أَوْ
அல்லது
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
فَعِدَّةٌ
கணக்கிடவும்
مِّنْ أَيَّامٍ
இருந்து/நாட்கள்
أُخَرَۗ
மற்ற(வை)
يُرِيدُ
நாடுவான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِكُمُ
உங்களுக்கு
ٱلْيُسْرَ
இலகுவை
وَلَا يُرِيدُ
இன்னும் நாடமாட்டான்
بِكُمُ
உங்களுக்கு
ٱلْعُسْرَ
சிரமத்தை
وَلِتُكْمِلُوا۟
இன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காக
ٱلْعِدَّةَ
எண்ணிக்கையை
وَلِتُكَبِّرُوا۟
இன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக
ٱللَّهَ
அல்லாஹ்வை
عَلَىٰ مَا
உங்களை நேர்வழி நடத்தியதற்காக
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Shahru Ramadaanallazeee unzila feehil Qur'aanu hudal linnaasi wa baiyinaatim minal hudaa wal furqaan; faman shahida minkumush shahra falyasumhu wa man kaana mareedan aw 'alaa safarin fa'iddatum min ayyaamin ukhar; yureedul laahu bikumul yusra wa laa yureedu bikumul 'usra wa litukmilul 'iddata wa litukabbirul laaha 'alaa maa hadaakum wa la'allakum tashkuroon

ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!

Tafseer

وَإِذَا سَأَلَكَ
கேட்டால்/உம்மிடம்
عِبَادِى
என் அடியார்கள்
عَنِّى
என்னைப் பற்றி
فَإِنِّى
நிச்சயமாக நான்
قَرِيبٌۖ
சமீபமானவன்
أُجِيبُ
பதிலளிக்கிறேன்
دَعْوَةَ
அழைப்புக்கு
ٱلدَّاعِ
அழைப்பாளரின்
إِذَا دَعَانِۖ
அவர் என்னை அழைத்தால்
فَلْيَسْتَجِيبُوا۟ لِى
ஆகவே எனக்கு அவர்கள் பதிலளிக்கவும்
وَلْيُؤْمِنُوا۟ بِى
இன்னும் அவர்கள்என்னைநம்பிக்கைகொள்ளவும்
لَعَلَّهُمْ يَرْشُدُونَ
அவர்கள் நேர்வழி அடைவதற்காக

Wa izaa sa alaka 'ibaadee 'annnee fa innee qareebun ujeebu da'wataddaa'i izaa da'aani falyastajeeboo lee walyu minoo beela 'allahum yarshudoon

(நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்." ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.

Tafseer

أُحِلَّ
அனுமதிக்கப்பட்டுள்ளது
لَكُمْ
உங்களுக்கு
لَيْلَةَ
இரவில்
ٱلصِّيَامِ
நோன்பு
ٱلرَّفَثُ
சேர்வது
إِلَىٰ نِسَآئِكُمْۚ
உங்கள் மனைவிகளுடன்
هُنَّ
அவர்கள் (பெண்கள்)
لِبَاسٌ
ஆடை
لَّكُمْ
உங்களுக்கு
وَأَنتُمْ
இன்னும் நீங்கள்(ஆண்கள்)
لِبَاسٌ
ஆடை
لَّهُنَّۗ
அவர்களுக்கு (பெண்களுக்கு)
عَلِمَ
அறிவான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
كُنتُمْ
இருந்தீர்கள்
تَخْتَانُونَ
ஏமாற்றுகிறீர்கள்
أَنفُسَكُمْ
உங்களை
فَتَابَ عَلَيْكُمْ
ஆகவே உங்கள் பிழை பொறுப்பை ஏற்றான்
وَعَفَا
இன்னும் மன்னித்தான்
عَنكُمْۖ
உங்களை
فَٱلْـَٰٔنَ
ஆகவே இப்போது
بَٰشِرُوهُنَّ
அவர்களுடன் சேருங்கள்
وَٱبْتَغُوا۟
இன்னும் தேடுங்கள்
مَا كَتَبَ
எதை/விதித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْۚ
உங்களுக்கு
وَكُلُوا۟
இன்னும் உண்ணுங்கள்
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
حَتَّىٰ يَتَبَيَّنَ
தெளிவாகும் வரை
لَكُمُ
உங்களுக்கு
ٱلْخَيْطُ ٱلْأَبْيَضُ
நூல்/வெள்ளை
مِنَ ٱلْخَيْطِ
இருந்து/நூல்
ٱلْأَسْوَدِ
கருப்பு
مِنَ ٱلْفَجْرِۖ
அதிகாலையில்
ثُمَّ
பிறகு
أَتِمُّوا۟
முழுமையாக்குங்கள்
ٱلصِّيَامَ
நோன்பை
إِلَى ٱلَّيْلِۚ
இரவு வரை
وَلَا تُبَٰشِرُوهُنَّ
அவர்களுடன் சேராதீர்கள்
وَأَنتُمْ
போது/நீங்கள்
عَٰكِفُونَ
தங்கியிருக்கிறீர்கள்
فِى ٱلْمَسَٰجِدِۗ
மஸ்ஜிதுகளில்
تِلْكَ
இவை
حُدُودُ
சட்டங்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
فَلَا تَقْرَبُوهَاۗ
எனவே அவற்றை நெருங்காதீர்கள்
كَذَٰلِكَ
அவ்வாறே
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
لِلنَّاسِ
மக்களுக்கு
لَعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

Uhilla lakum laylatas Siyaamir rafasu ilaa nisaaa'ikum; hunna libaasullakum wa antum libaasullahunn; 'alimal laahu annakum kuntum takhtaanoona anfusakum fataaba 'alaikum wa 'afaa 'ankum fal'aana baashiroo hunna wabtaghoo maa katabal laahoo lakum; wa kuloo washraboo hattaa yatabaiyana lakumul khaitul abyadu minal khaitil aswadi minal fajri summa atimmus Siyaama ilal layl; wa laa tubaashiroo hunna wa antum 'aakifoona fil masaajid; tilka hudoodul laahi falaa taqraboohaa; kazaalika yubaiyinul laahu aayaatihee linnaasi la'allahum yattaqoon

(நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், யாதொரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள்மீது இரக்கமுற்று உங்கள் கஷ்டத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும் வரையில் (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்றுப்) முழுமையாக்குங்கள். ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) பள்ளிகளில் தங்கி (இஃதிகாஃபு) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால், அவ்வரம்புகளை (மீற) நீங்கள் நெருங்காதீர்கள். மனிதர்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கின்றான்.

Tafseer

وَلَا تَأْكُلُوٓا۟
உண்ணாதீர்கள்
أَمْوَٰلَكُم
உங்கள் செல்வங்களை
بَيْنَكُم
உங்களுக்கு மத்தியில்
بِٱلْبَٰطِلِ
தவறாக
وَتُدْلُوا۟
இன்னும் கொடுக்காதீர்கள்
بِهَآ
அவற்றை
إِلَى ٱلْحُكَّامِ
அதிகாரிகளிடம்
لِتَأْكُلُوا۟
நீங்கள்உண்பதற்காக
فَرِيقًا
ஒரு பகுதியை
مِّنْ
இருந்து
أَمْوَٰلِ
செல்வங்கள்
ٱلنَّاسِ
மக்களுடைய
بِٱلْإِثْمِ
பாவமாக
وَأَنتُمْ
நீங்கள்
تَعْلَمُونَ
அறிந்திருந்தும்

Wa laa taakuloo amwaalakum bainakum bilbaatili wa tudloo bihaaa ilal hukkaami litaakuloo fareeqam min amwaalin naasi bil ismi wa antum ta'lamoon

(அன்றி) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்து கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.

Tafseer

يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
عَنِ
பற்றி
ٱلْأَهِلَّةِۖ
பிறைகள்
قُلْ
கூறுவீராக
هِىَ
அவை
مَوَٰقِيتُ
காலங்களை அறிவிக்கக்கூடியவை
لِلنَّاسِ
மக்களுக்கு
وَٱلْحَجِّۗ
இன்னும் ஹஜ்ஜு
وَلَيْسَ
இன்னும் இல்லை
ٱلْبِرُّ
நன்மை
بِأَن تَأْتُوا۟
நீங்கள் வருவது
ٱلْبُيُوتَ
வீடுகளுக்கு
مِن
இருந்து
ظُهُورِهَا
அவற்றின்பின்வழிகள்
وَلَٰكِنَّ
எனினும்
ٱلْبِرَّ
நன்மை
مَنِ ٱتَّقَىٰۗ
எவர்/அல்லாஹ்வை அஞ்சினார்
وَأْتُوا۟
வாருங்கள்
ٱلْبُيُوتَ
வீடுகளுக்கு
مِنْ أَبْوَٰبِهَاۚ
அவற்றின் தலைவாசல்களிலிருந்து
وَٱتَّقُوا۟ ٱللَّهَ
இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி அடைவதற்காக

Yas'aloonaka 'anil ahillati qul hiya mawaaqeetu linnaasi wal Hajj; wa laisal birru bi an taatul buyoota min zuhoorihaa wa laakinnal birra manit taqaa; waatul buyoota min abwaa bihaa; wattaqullaaha la'allakum tuflihoon

(நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவை மனிதர்களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய காலங்களை(யும்) அறிவிக்கக் கூடியவை." மேலும் (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால் நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம்.

Tafseer

وَقَٰتِلُوا۟
போர் புரியுங்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ٱلَّذِينَ
எவர்கள்
يُقَٰتِلُونَكُمْ
போர் புரிகிறார்கள்/உங்களிடம்
وَلَا تَعْتَدُوٓا۟ۚ
வரம்பு மீறாதீர்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُحِبُّ
அவன் நேசிப்பதில்லை
ٱلْمُعْتَدِينَ
வரம்பு மீறுபவர்களை

Wa qaatiloo fee sabeelillaahil lazeena yuqaatiloonakum wa laa ta'tadooo; innal laaha laa yuhibbul mu'tadeen

உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) கடந்துவிட வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.

Tafseer