Skip to main content

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَمَاتُوا۟
இன்னும் இறந்தார்கள்
وَهُمْ
அவர்கள்
كُفَّارٌ
நிராகரிப்பாளர்கள்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
عَلَيْهِمْ
அவர்கள் மீதுதான்
لَعْنَةُ ٱللَّهِ
அல்லாஹ்வின் சாபம்
وَٱلْمَلَٰٓئِكَةِ
இன்னும் வானவர்கள்
وَٱلنَّاسِ
இன்னும் மக்கள்
أَجْمَعِينَ
அனைவர்

Innal lazeena kafaroo wamaa too wa hum kuffaarun ulaaa'ika 'alaihim la 'natul laahi walmalaa'ikati wannaasi ajma'een

(அன்றி,) எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்துவிட்டு (அதனை சீர்திருத்தாமல்) நிராகரித்த வண்ணமாகவே இறந்து விடுகின்றார்களோ அவர்கள்மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் நிச்சயமாக உண்டாகின்றன.

Tafseer

خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَاۖ
அதில்
لَا يُخَفَّفُ
இலேசாக்கப்படாது
عَنْهُمُ
அவர்களை விட்டு
ٱلْعَذَابُ
வேதனை
وَلَا هُمْ
இன்னும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்

khaalideena feeha laa yukhaffafu 'anhumul 'azaabu wa laa hum yunzaroon

(மேலும் அவர்கள்) அ(ச்சாபத்)தில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (மறுமையில்) அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்கள் (ஓய்வு எடுப்பதற்கு) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

وَإِلَٰهُكُمْ
இன்னும் உங்கள்இறைவன்
إِلَٰهٌ
ஓர் இறைவன்
وَٰحِدٌۖ
ஒரே
لَّآ
அறவே இல்லை
إِلَٰهَ
இறைவன்
إِلَّا
அவனைத் தவிர
هُوَ ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்

Wa ilaahukum illaahunw waahid, laaa ilaaha illaa Huwar Rahmaanur Raheem

(மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى خَلْقِ
படைத்திருப்பதில்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியை
وَٱخْتِلَٰفِ
இன்னும் மாறுவதில்
ٱلَّيْلِ
இரவு
وَٱلنَّهَارِ
இன்னும் பகல்
وَٱلْفُلْكِ
இன்னும் கப்பல்கள்
ٱلَّتِى
எவை
تَجْرِى
ஓடுகின்றன
فِى ٱلْبَحْرِ
கடலில்
بِمَا
எவற்றைக் கொண்டு
يَنفَعُ
பலன் தருகின்றன
ٱلنَّاسَ
மக்களுக்கு
وَمَآ
இன்னும் எது
أَنزَلَ
இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنَ
இருந்து
ٱلسَّمَآءِ
வானம்/மேகம்
مِن
இருந்து
مَّآءٍ
தண்ணீர்
فَأَحْيَا
உயிர்ப்பித்தான்
بِهِ
அதன் மூலம்
ٱلْأَرْضَ
பூமியை
بَعْدَ
பின்னர்
مَوْتِهَا
அது இறந்த
وَبَثَّ
இன்னும் பரப்பினான்
فِيهَا
அதில்
مِن
இருந்து
كُلِّ
எல்லாம்
دَآبَّةٍ
கால்நடைகள்
وَتَصْرِيفِ
இன்னும் திருப்பிவிடுதல்
ٱلرِّيَٰحِ
காற்றுகளை
وَٱلسَّحَابِ
இன்னும் மேகம்
ٱلْمُسَخَّرِ
கட்டுப்படுத்தப்பட்ட
بَيْنَ
இடையில்
ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ
வானம்/இன்னும் பூமி
لَءَايَٰتٍ
திட்டமாக அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகிறார்கள்

Inna fee khalqis samaawaati wal ardi wakhtilaafil laili wannahaari walfulkil latee tajree fil hahri bimaa yanfa'unnaasa wa maaa anzalal laahu minas samaaa'i mim maaa'in fa ahyaa bihil arda ba'da mawtihaa wa bas sa feehaa min kulli daaabbatinw wa tasreefir riyaahi wassahaabil musakhkhari bainas samaaa'i wal ardi la aayaatil liqawminy ya'qiloon

அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக்கொண்டு (வறண்டு) இறந்த பூமியை அல்லாஹ் உயிர்ப்பி(த்துச் செழிப்பாக்கிவை)ப்பதிலும், கால்நடைகள் அனைத்தையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்றை(ப் பல கோணங்களில் திருப்பி)த் திருப்பி விடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப்பட்டிருக்கும் மேகத்திலும், (மனிதர்களுக்குள்ள பயன்களை ஆராய்ந்து) சிந்திக்கும் மக்களுக்கு (அவனுடைய அருளையும், அன்பையும் ஆற்றலையும் அறிவிக்கக்கூடிய) பல அத்தாட்சிகள் நிச்சயமாக இருக்கின்றன.

Tafseer

وَمِنَ ٱلنَّاسِ
மக்களிலிருந்து
مَن
எவர்
يَتَّخِذُ
எடுத்துக் கொள்கிறார்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
أَندَادًا
இணைகளை
يُحِبُّونَهُمْ
அவற்றை நேசிக்கிறார்கள்
كَحُبِّ
நேசிப்பது/போல
ٱللَّهِۖ
அல்லாஹ்வை
وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்கள்
أَشَدُّ
மிகக் கடுமையானவர்கள்
حُبًّا
நேசிப்பதில்
لِّلَّهِۗ
அல்லாஹ்வை
وَلَوْ
பார்த்தால்
يَرَى ٱلَّذِينَ
எவர்கள்
ظَلَمُوٓا۟
அநியாயம்செய்தார்கள்
إِذْ
போது
يَرَوْنَ
காண்பார்கள்
ٱلْعَذَابَ
வேதனையை
أَنَّ
நிச்சயமாக
ٱلْقُوَّةَ
பலம்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
جَمِيعًا
அனைத்தும்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
شَدِيدُ
கடினமானவன்
ٱلْعَذَابِ
வேதனை செய்வதில்

Wa minan naasi mai yattakhizu min doonil laahi andaadai yuhibboonahum kahubbil laahi wallazeena aamanooo ashaddu hubbal lillah; wa law yaral lazeena zalamoo iz yarawnal 'azaaba annal quwwata lillaahi jamee'anw wa annallaaha shadeedul 'azaab

மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வையே நேசிப்பார்கள். (தவிர) இந்த அநியாயக்காரர்கள் (சிறிது) சிந்திக்க வேண்டாமா? இவர்கள் வேதனையைத் (தங்கள் கண்ணால்) காணும் போது வேதனை செய்வதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவனாக இருப்பதுடன், எல்லா வல்லமையும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே இருக்கின்றன (தாங்கள் பிரியம் வைத்தவைகளுக்கு இல்லை என்றும் அறிந்துகொள்வார்கள்).

Tafseer

إِذْ
போது
تَبَرَّأَ
விலகிக்கொண்டார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتُّبِعُوا۟
பின்பற்றப்பட்டார்கள்
مِنَ
இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
وَرَأَوُا۟
இன்னும் கண்டார்கள்
ٱلْعَذَابَ
வேதனையை
وَتَقَطَّعَتْ
இன்னும் அறுந்தது
بِهِمُ
அவர்களுக்கிடையில்
ٱلْأَسْبَابُ
தொடர்புகள்

Iz tabarra al lazeenat tubi'oo minal lazeenattaba'oo wa ra awul 'azaaba wa taqatta'at bihimul asbaab

(இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் கைவிட்டு) விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு(ம், அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்குமிடையில்) இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும்.

Tafseer

وَقَالَ
இன்னும் கூறுவார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
لَوْ أَنَّ
நிச்சயமாக நமக்கு முடிந்தால்
كَرَّةً
திரும்பச்செல்வது
فَنَتَبَرَّأَ
விலகிக் கொள்வோம்
مِنْهُمْ
அவர்களை விட்டு
كَمَا
போல
تَبَرَّءُوا۟
விலகிக்கொண்டார்கள்
مِنَّاۗ
எங்களைவிட்டு
كَذَٰلِكَ
இவ்வாறே
يُرِيهِمُ
காண்பிப்பான்/ அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
حَسَرَٰتٍ
மனவேதனைகளாக
عَلَيْهِمْۖ
அவர்களுக்கு
وَمَا
இன்னும் இல்லை
هُم
அவர்கள்
بِخَٰرِجِينَ
வெளியேறுபவர்களாக
مِنَ ٱلنَّارِ
நெருப்பிலிருந்து

Wa qaalal lazeenat taba'oo law anna lanaa karratan fanatabarra a minhum kamaa tabarra'oo minnaa; kazaalika yureehimullaahu a'maalahum hasaraatin 'alaihim wa maa hum bikhaarijeena minan Naar

தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொருமுறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழிகாட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக்கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
كُلُوا۟
உண்ணுங்கள்
مِمَّا
எவற்றில்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
حَلَٰلًا
அனுமதிக்கப்பட்டதை
طَيِّبًا
நல்லது
وَلَا تَتَّبِعُوا۟
இன்னும் பின்பற்றாதீர்கள்
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَكُمْ
உங்களுக்கு
عَدُوٌّ مُّبِينٌ
எதிரி/பகிரங்கமான

Yaaa ayyuhan naasu kuloo mimmaa fil ardi halaalan taiyibanw wa laa tattabi'oo khutu waatish Shaitaan; innahoo lakum 'aduwwum mubeen

மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.

Tafseer

إِنَّمَا يَأْمُرُكُم
உங்களுக்கு அவன் ஏவுவதெல்லாம்
بِٱلسُّوٓءِ
தீமையை
وَٱلْفَحْشَآءِ
இன்னும் மானக்கேடானதை
وَأَن تَقُولُوا۟
இன்னும் நீங்கள் கூறுவதை
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
مَا لَا
நீங்கள் அறியாதவற்றை

Innamaa yaamurukum bissooo'i walfahshaaa'i wa an taqooloo alal laahi maa laa ta'lamoon

தீமைகள் மற்றும் மானக்கேடானவைகளை நீங்கள் செய்வதற்கும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதற்கும் ஷைத்தான் உங்களைத் தூண்டுகிறான்.

Tafseer

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمُ
அவர்களுக்கு
ٱتَّبِعُوا۟
பின்பற்றுங்கள்
مَآ
எதை
أَنزَلَ
இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
قَالُوا۟
கூறுகிறார்கள்
بَلْ
மாறாக
نَتَّبِعُ
பின்பற்றுவோம்
مَآ
எதை
أَلْفَيْنَا
பெற்றோம்
عَلَيْهِ
அதன் மீது
ءَابَآءَنَآۗ
எங்கள் மூதாதைகளை
أَوَلَوْ كَانَ
இருந்தாலுமா?
ءَابَآؤُهُمْ
மூதாதைகள் அவர்களுடைய
لَا يَعْقِلُونَ
அறியமாட்டார்கள்
شَيْـًٔا وَلَا
எதையும்
يَهْتَدُونَ
இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்

Wa izaa qeela lahumuttabi'oo maaa anzalal laahu qaaloo bal nattabi'u maaa alfainaa 'alaihi aabaaa'anaaa; awalaw kaana aabaaa'hum laa ya'qiloona shai'anw wa laa yahtadoon

மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) "அவ்வாறன்று. எவற்றின் மீது எங்களுடைய மூதாதைகள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்துகொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்" எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்!)

Tafseer