Skip to main content

إِذْ قَالَ
சமயம்/கூறினான்
لَهُۥ
அவருக்கு
رَبُّهُۥٓ
அவருடைய இறைவன்
أَسْلِمْۖ
பணிந்து (முஸ்லிமாகி) விடு
قَالَ
கூறினார்
أَسْلَمْتُ
பணிந்து (முஸ்லிமாகி)விட்டேன்
لِرَبِّ
இறைவனுக்கு
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்

Iz qaala lahoo Rabbuhooo aslim qaala aslamtu li Rabbil 'aalameen

இப்ராஹீமை (நோக்கி) அவருடைய இறைவன் "நீ (எனக்கு) வழிப்படு!" எனக் கூறிய சமயத்தில் அவர் (எவ்வித தயக்கமுமின்றி) "அகிலத்தாரின் இறைவனுக்கு (இதோ) நான் வழிப்பட்டேன்" எனக் கூறினார்.

Tafseer

وَوَصَّىٰ
இன்னும் உபதேசித்தார்
بِهَآ
அதை
إِبْرَٰهِۦمُ
இப்ராஹீம்
بَنِيهِ
பிள்ளைகளுக்கு/தன்
وَيَعْقُوبُ
இன்னும் யஃகூப்
يَٰبَنِىَّ
என் பிள்ளைகளே
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ٱصْطَفَىٰ
தேர்ந்தெடுத்தான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلدِّينَ
மார்க்கத்தை
فَلَا تَمُوتُنَّ
எனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்
إِلَّا
தவிர
وَأَنتُم
நீங்கள் இருக்கவே
مُّسْلِمُونَ
முஸ்லிம்களாக

Wa wassaa bihaaa Ibraaheemu baneehi wa Ya'qoob, yaa baniyya innal laahas tafaa lakumud deena falaa tamootunna illaa wa antum muslimoon

அவ்வாறே இப்ராஹீம் தன்னுடைய சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஃகூபும் (தன்னுடைய சந்ததிகளை நோக்கி) "என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். ஆதலால் நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக அன்றி இறந்துவிட வேண்டாம்" (என்றே கூறினார்).

Tafseer

أَمْ كُنتُمْ
அல்லது/இருந்தீர்கள்
شُهَدَآءَ
சாட்சிகளாக
إِذْ حَضَرَ
போது/வந்தது
يَعْقُوبَ
யஃகூபுக்கு
ٱلْمَوْتُ
மரணம்
إِذْ قَالَ
போது/கூறினார்
لِبَنِيهِ
பிள்ளைகளை நோக்கி/தன்
مَا
யாரை
تَعْبُدُونَ
நீங்கள் வணங்குவீர்கள்
مِنۢ بَعْدِى
எனக்குப் பின்னர்
قَالُوا۟
கூறினார்கள்
نَعْبُدُ
வணங்குவோம்
إِلَٰهَكَ
கடவுளை/உம்
وَإِلَٰهَ
இன்னும் கடவுளை
ءَابَآئِكَ
மூதாதைகளின்/உம்
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீம்
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
إِلَٰهًا
ஒரு கடவுளை
وَٰحِدًا
ஒரே
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
لَهُۥ
அவனுக்கு
مُسْلِمُونَ
முஸ்லிம்கள்

Am kuntum shuhadaaa'a iz hadara Ya'qoobal mawtu iz qaala libaneehi maa ta'budoona mim ba'dee qaaloo na'budu ilaahaka wa ilaaha aabaaa'ika Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa Ilaahanw waahidanw wa nahnu lahoo muslimoon

(யூதர்களே!) யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி "எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு "உங்களுடைய இறைவனும், உங்களுடைய மூதாதைகளான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்" என்றே கூறினார்கள்.

Tafseer

تِلْكَ
அது
أُمَّةٌ
சமுதாயம்
قَدْ خَلَتْۖ
சென்றுவிட்டது
لَهَا
அதற்கு
مَا كَسَبَتْ
எது/செய்தது
وَلَكُم
இன்னும் உங்களுக்கு
مَّا كَسَبْتُمْۖ
எது/செய்தீர்கள்
وَلَا تُسْـَٔلُونَ
இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
عَمَّا كَانُوا۟
எதைப்பற்றி/இருந்தனர்/செய்வார்கள்

Tilka ummatun qad khalat lahaa maa kasabat wa lakum maa kasabtum wa laa tus'aloona 'ammaa kaano ya'maloon

(மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்.) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது.

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
هُودًا
யூதர்களாக
أَوْ
அல்லது
نَصَٰرَىٰ
கிறித்துவர்களாக
تَهْتَدُوا۟ۗ
நேர்வழி பெறுவீர்கள்
قُلْ
கூறுவீராக
بَلْ
மாறாக
مِلَّةَ
மார்க்கத்தை
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமின்
حَنِيفًاۖ
இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்
وَمَا كَانَ
இன்னும் அவர் இருக்கவில்லை
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Wa qaaloo koonoo Hoodan aw Nasaaraa tahtadoo; qul bal Millata Ibraaheema Haneefanw wa maa kaana minal mushrikeen

(நம்பிக்கையாளர்களை நோக்கி) அவர்கள் "நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரான வழியை அடைந்து விடுவீர்கள்" எனக் கூறுகிறார்கள். அதற்கு "அவ்வாறன்று! நேரான வழியைச் சார்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணை வைத்து வணங்கியவரல்ல" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

قُولُوٓا۟
கூறுங்கள்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
وَمَآ
இன்னும் எது
أُنزِلَ
இறக்கப்பட்டது
إِلَيْنَا
நமக்கு
وَمَآ
இன்னும் எது
أُنزِلَ
இறக்கப்பட்டது
إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமுக்கு
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
وَٱلْأَسْبَاطِ
இன்னும் சந்ததிகள்
وَمَآ
இன்னும் எது
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்(கள்)
مُوسَىٰ
மூசா
وَعِيسَىٰ
இன்னும் ஈஸா
وَمَآ
இன்னும் எது
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்(கள்)
ٱلنَّبِيُّونَ
நபிமார்களுக்கு
مِن
இருந்து
رَّبِّهِمْ
இறைவன்/தங்கள்
لَا نُفَرِّقُ
பிரிக்க மாட்டோம்
بَيْنَ
மத்தியில்
أَحَدٍ
ஒருவருக்கு
مِّنْهُمْ
அவர்களில்
وَنَحْنُ
இன்னும் நாம்
لَهُۥ
அவனுக்கு
مُسْلِمُونَ
முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)

Qoolooo aamannaa billaahi wa maaa unzila ilainaa wa maaa unzila ilaaa Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa wa Ya'qooba wal Asbaati wa maaootiya Moosa wa 'Eesaa wa maaa ootiyan Nabiyyoona mir Rabbihim laa nufaariq baina ahadim minhum wa nahnu lahoo muslimoon

(நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: "அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம்."

Tafseer

فَإِنْ ءَامَنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொண்டால்
بِمِثْلِ
போன்றே
مَآ
எதை
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டீர்கள்
بِهِۦ
அதைக் கொண்டு
فَقَدِ
திட்டமாக
ٱهْتَدَوا۟ۖ
நேர்வழி பெறுவார்கள்
وَّإِن تَوَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
فَإِنَّمَا هُمْ
அவர்களெல்லாம்
فِى شِقَاقٍۖ
முரண்பாட்டில்தான்
فَسَيَكْفِيكَهُمُ
ஆக, பாதுகாப்பான்/உம்மை/அவர்களிடமிருந்து
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَهُوَ
இன்னும் அவன்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Fa in aamanoo bimisli maaa aamantum bihee faqadih tadaw wa in tawallaw fa innamaa hum fee shiqaaq; fasayakfeekahumul laah; wa Huwas Samee'ul Aleem

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

صِبْغَةَ ٱللَّهِۖ
மார்க்கத்தை/அல்லாஹ்வுடைய
وَمَنْ
இன்னும் யார்
أَحْسَنُ
மிக அழகானவன்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வை விட
صِبْغَةًۖ
மார்க்கம்
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
لَهُۥ عَٰبِدُونَ
அவனையே/வணங்கக்கூடியவர்கள்

Sibghatal laahi wa man ahsanu minal laahi sibghatanw wa nahnu lahoo 'aabidoon

"அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வைவிட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? (யாருமில்லை) நாம் அவனையே வணங்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!)

Tafseer

قُلْ
கூறுவீராக
أَتُحَآجُّونَنَا
தர்க்கிக்கிறீர்களா?/நம்மிடம்
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விசயத்தில்
وَهُوَ
அவன்
رَبُّنَا
இறைவன்/எங்கள்
وَرَبُّكُمْ
இன்னும் இறைவன்/உங்கள்
وَلَنَآ
இன்னும் எங்களுக்கு
أَعْمَٰلُنَا
செயல்கள்/எங்கள்
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
أَعْمَٰلُكُمْ
செயல்கள்/உங்கள்
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
لَهُۥ
அவனுக்கே
مُخْلِصُونَ
வழிபாட்டைக் கலப்பின்றி செய்பவர்கள்

Qul atuhaaajjoonanaa fil laahi wa Huwa Rabbunaa wa Rabbukum wa lanaa a'maalunaa wa lakum a'maalukum wa nahnu lahoo mukhlisson

"நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அவனே! எங்கள் செயல்கள் (அதன் பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (அதன் பலன்) உங்களுக்கே. நாங்கள் அவனுக்கு இணைவைக்காது, வணக்கங்களை முற்றிலும் அவனுக்கே களப்பற்றதாக ஆக்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!)

Tafseer

أَمْ
அல்லது
تَقُولُونَ
கூறுகிறீர்கள்
إِنَّ
நிச்சயமாக
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீம்
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
وَٱلْأَسْبَاطَ
இன்னும் சந்ததிகள்
كَانُوا۟
இருந்தார்கள்
هُودًا
யூதர்களாக
أَوْ
அல்லது
نَصَٰرَىٰۗ
கிறித்துவர்களாக
قُلْ
கூறுவீராக
ءَأَنتُمْ
நீங்களா?
أَعْلَمُ
மிக அறிந்தவர்(கள்)
أَمِ
அல்லது
ٱللَّهُۗ
அல்லாஹ்வா?
وَمَنْ
இன்னும் யார்?
أَظْلَمُ
மகா அநியாயக்காரர்
مِمَّن
எவரைவிட
كَتَمَ
மறைத்தார்
شَهَٰدَةً
சாட்சியத்தை
عِندَهُۥ
தன்னிடத்தில்
مِنَ ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَمَا
இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
عَمَّا
பற்றி/அல்லாஹ்
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்

Am taqooloona inna Ibraaheema wa Ismaa'eela wa Ishaaq wa Ya'qooba wal asbaata kaanoo Hoodan aw Nasaaraa; qul 'a-antum a'lamu amil laah; wa man azlamu mimman katama shahaadatan 'indahoo minallaah; wa mallaahu bighaafilin 'ammaa ta'maloon

"நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இவர்களும், இவர்களுடைய சந்ததிகளும் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்களென கூறுவீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா? அல்லாஹ்வா? என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அன்றி, (இதைப்பற்றி) தன்னிடமிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவனைவிடப் பெரிய அநியாயக்காரன் யார்? உங்களின் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை" (என்றும் கூறுங்கள்.)

Tafseer