Skip to main content

وَقَالُوا۟
கூறினார்கள்
لَن يَدْخُلَ
நுழையவே மாட்டார்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
إِلَّا مَن
தவிர/எவர்(கள்)
كَانَ
இருக்கிறார்(கள்)
هُودًا
யூதர்களாக
أَوْ
அல்லது
نَصَٰرَىٰۗ
கிறித்துவர்களாக
تِلْكَ
அவை
أَمَانِيُّهُمْۗ
வீண் நம்பிக்கைகள்/அவர்களுடைய
قُلْ
கூறுவீராக
هَاتُوا۟
கொண்டு வாருங்கள்
بُرْهَٰنَكُمْ
ஆதாரத்தை/உங்கள்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa qaaloo lai yadkhulal jannata illaa man kaana Hoodan aw Nasaaraa; tilka ammniyyuhum; qul haatoo burhaa nakum in kuntum saadiqeen

(நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சுவர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுடைய வீண் நம்பிக்கையே(யன்றி உண்மையல்ல. ஆதலால் அவர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்களுடைய (இவ்வார்த்தைக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்."

Tafseer

بَلَىٰ
அவ்வாறன்று
مَنْ
எவர்
أَسْلَمَ
பணியவைத்தார்
وَجْهَهُۥ
தன் முகத்தை
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
وَهُوَ
அவரோ
مُحْسِنٌ
நன்மை செய்பவர்
فَلَهُۥٓ
அவருக்கு
أَجْرُهُۥ
அவருடைய கூலி
عِندَ رَبِّهِۦ
இடம்/இறைவன்/அவருடைய
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

Balaa man aslama wajhahoo lillaahi wa huwa muhsinun falahooo ajruhoo 'inda rabbihee wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon

(உண்மை) அவ்வாறன்று! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ அவருக்கே அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. அன்றி, இத்தகையவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

وَقَالَتِ
இன்னும் கூறினா(ர்க)ள்
ٱلْيَهُودُ
யூதர்கள்
لَيْسَتِ
இல்லை
ٱلنَّصَٰرَىٰ
கிறித்துவர்கள்
عَلَىٰ شَىْءٍ
எதிலும்
وَقَالَتِ
கூறினா(ர்க)ள்
ٱلنَّصَٰرَىٰ
கிறித்துவர்கள்
لَيْسَتِ
இல்லை
ٱلْيَهُودُ
யூதர்கள்
عَلَىٰ شَىْءٍ
எதிலும்
وَهُمْ
அவர்களுமோ
يَتْلُونَ
ஓதுகிறார்கள்
ٱلْكِتَٰبَۗ
வேதத்தை
كَذَٰلِكَ
இப்படியே
قَالَ
கூறினார்(கள்)
ٱلَّذِينَ لَا
எவர்கள்/அறிய மாட்டார்கள்
مِثْلَ
போன்றே
قَوْلِهِمْۚ
இவர்களுடைய கூற்று
فَٱللَّهُ
ஆகவே அல்லாஹ்
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
بَيْنَهُمْ
இவர்களுக்கு மத்தியில்
يَوْمَ
நாளன்று
ٱلْقِيَٰمَةِ
மறுமை
فِيمَا
எதில்
كَانُوا۟
இருந்தார்கள்
فِيهِ
அதில்
يَخْتَلِفُونَ
தர்க்கிக்கிறார்கள்

Wa qaalatil Yahoodu laisatin Nasaaraa 'alaa shai'inw-wa qaalatin Nasaaraaa laisatil Yahoodu 'alaa shai'inw'wa hum yatloonal Kitaab; kazaalika qaalal lazeena la ya'lamoona misla qawlihim Yawmal Qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon

தவிர, "கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை" என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறே) "யூதர்கள் எ(ந்த மார்க்கத்) திலுமில்லை" எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் "பழைய ஏற்பாடாகிய" தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக் கொள்வதுபோலவே (வேதத்தை) அறிந்துகொள்ளாத (இணைவைத்து வணங்குப)வர்கள் ("யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்களல்ல" எனக்) கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.

Tafseer

وَمَنْ
இன்னும் யார்
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
مِمَّن
எவனைவிட
مَّنَعَ
தடுத்தான்
مَسَٰجِدَ
மஸ்ஜிதுகளை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
أَن يُذْكَرَ
கூறப்படுவதை
فِيهَا
அவற்றில்
ٱسْمُهُۥ
பெயர்/அவனுடைய
وَسَعَىٰ
இன்னும் முயற்சித்தான்
فِى خَرَابِهَآۚ
பாழாகுவதில்/அவை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
مَا كَانَ
இருக்கவில்லை
لَهُمْ
அவர்களுக்கு(அனுமதி)
أَن يَدْخُلُوهَآ
அவர்கள் நுழைய/அவற்றில்
إِلَّا
தவிர
خَآئِفِينَۚ
பயந்தவர்களாக
لَهُمْ
அவர்களுக்கு
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகில்
خِزْىٌ
இழிவு
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
عَذَابٌ عَظِيمٌ
வேதனை/பெரியது

Wa man azlamu mimmam-mana'a masaajidal laahi ai-yuzkara feehas muhoo wa sa'aa fee kharaabihaaa; ulaaa'ika maa kaana lahum ai yadkhuloohaaa illaa khaaa''feen; lahum fiddunyaa khizyunw wa lahum fil aakhirati 'azaabun 'azeem

அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கே
ٱلْمَشْرِقُ
கிழக்கு
وَٱلْمَغْرِبُۚ
இன்னும் மேற்கு
فَأَيْنَمَا
ஆகவே எங்கெல்லாம்
تُوَلُّوا۟
திருப்புகிறீர்கள்
فَثَمَّ
அங்கு
وَجْهُ
முகம்
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
وَٰسِعٌ
விசாலமானவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa lillaahil mashriqu walmaghrib; fa aynamaa tuwalloo fasamma wajhullaah; innal laaha waasi'un Aleem

கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன்.

Tafseer

وَقَالُوا۟
கூறுகின்றனர்
ٱتَّخَذَ
எடுத்துக் கொண்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَدًاۗ
குழந்தையை,சந்ததியை
سُبْحَٰنَهُۥۖ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
بَل لَّهُۥ
மாறாக/அவனுக்கு
مَا فِى
எவை/வானங்களில்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
كُلٌّ
எல்லோரும்
لَّهُۥ
அவனுக்கு
قَٰنِتُونَ
பணிந்தவர்கள்

Wa qaalut takhazal laahu waladan subhaanahoo bal lahoo maa fis samaawaati wal ardi kullul lahoo qaanitoon

"அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்" என்றும் கூறுகின்றனர். அவ்வாறன்று; அவனோ மிக்க பரிசுத்தமானவன். அன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே அன்றி சந்ததியாகக் கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை).

Tafseer

بَدِيعُ
புதுமையான படைப்பாளன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
وَإِذَا قَضَىٰٓ
இன்னும் அவன் முடிவு செய்தால்
أَمْرًا
ஒரு காரியத்தை
فَإِنَّمَا
அவன் கூறுவதெல்லாம்
يَقُولُ لَهُۥ
அதற்கு
كُن
ஆகு!
فَيَكُونُ
உடனே அது ஆகிவிடும்

Badree'us samaawaati wal ardi wa izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fayakoon

(அன்றி) அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை "ஆகுக!" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது.

Tafseer

وَقَالَ
இன்னும் கூறினார்(கள்)
ٱلَّذِينَ لَا
எவர்கள்/அறிய மாட்டார்கள்
لَوْلَا يُكَلِّمُنَا
பேச வேண்டாமா/நம்மிடம்/அல்லாஹ்
أَوْ
அல்லது
تَأْتِينَآ
வரவேண்டாமா/நமக்கு
ءَايَةٌۗ
ஒரு வசனம்
كَذَٰلِكَ
இப்படியே
قَالَ
கூறினார்(கள்)
ٱلَّذِينَ مِن
எவர்கள்/முன்னர்/இவர்களுக்கு
مِّثْلَ
போன்றே
قَوْلِهِمْۘ
கூற்றை/இவர்களின்
تَشَٰبَهَتْ
ஒப்பாகி விட்டன
قُلُوبُهُمْۗ
உள்ளங்கள்/இவர்களுடைய
قَدْ بَيَّنَّا
திட்டமாக தெளிவாக்கினோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لِقَوْمٍ
சமுதாயத்திற்கு
يُوقِنُونَ
உறுதி கொள்வார்கள்

Wa qaalal lazeena laa ya'lamoona law laa yukallimunal laahu aw taateenaaa aayah; kazaalika qaalal lazeena min qablihim misla qawlihim; tashaabahat quloobuhum; qad baiyannal aayaati liqawminy yooqinoon

மேலும் கல்வி (அறிவு) இல்லாதோர் "அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?" எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கின்றன. (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَرْسَلْنَٰكَ
அனுப்பினோம்/ உம்மை
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
بَشِيرًا
நற்செய்தி கூறுபவராக
وَنَذِيرًاۖ
இன்னும் எச்சரிப்பவராக
وَلَا تُسْـَٔلُ
இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்
عَنْ
பற்றி
أَصْحَٰبِ ٱلْجَحِيمِ
நரகவாசிகள்

Innaaa arsalnaaka bilhaqqi basheeranw wa nazeeranw wa laa tus'alu 'am Ashaabil Jaheem

(நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீங்கள் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நாம் உங்களை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே (அவர்கள் உங்களுடைய சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது.

Tafseer

وَلَن تَرْضَىٰ
திருப்தியடையவே மாட்டா(ர்க)ள்
عَنكَ
உம்மைப் பற்றி
ٱلْيَهُودُ
யூதர்கள்
وَلَا ٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்துவர்கள்
حَتَّىٰ تَتَّبِعَ
நீர்பின்பற்றும்வரை
مِلَّتَهُمْۗ
மார்க்கத்தை/அவர்களுடைய
قُلْ
கூறுவீராக
إِنَّ
நிச்சயமாக
هُدَى
நேர்வழி
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
هُوَ ٱلْهُدَىٰۗ
அதுதான்/நேர்வழி
وَلَئِنِ ٱتَّبَعْتَ
நீர் பின்பற்றினால்
أَهْوَآءَهُم
மன விருப்பங்களை அவர்களுடைய
بَعْدَ
பின்னர்
ٱلَّذِى
எது
جَآءَكَ
வந்தது/உமக்கு
مِنَ
இருந்து
ٱلْعِلْمِۙ
ஞானத்தில்
مَا
இல்லை
لَكَ
உமக்கு
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مِن وَلِىٍّ
பொறுப்பாளர்
وَلَا نَصِيرٍ
இன்னும் உதவியாளர் இல்லை

Wa lan tardaa 'ankal Yahoodu wa lan Nasaaraa hattaa tattabi'a millatahum; qul inna hudal laahi huwalhudaa; wa la'init taba'ta ahwaaa'ahum ba'dal lazee jaaa'aka minal 'ilmimaa laka minal laahi minw waliyyinw wa laa naseer

(நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) "அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)" எனக் கூறிவிடுங்கள். அன்றி உங்களுக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உங்களை காப்பவனுமில்லை; உங்களுக்கு உதவி செய்பவனுமில்லை.

Tafseer